Tuesday, January 04, 2022

You're too great பெரியப்பா...!

                                             

Mr. C T Velayutham (21/07/1944 - 01/01/2022)


"பெரியப்பா" என்றுதான் எப்போதுமே என் மொபைலில் அவருடைய எண்ணை சேமித்து வைத்திருக்கிறேன்... ஏனெனில், "பெரியப்பா என்றால் எந்தப் பெரியப்பா?" என்கிற கேள்வி என்றுமே வந்ததில்லை!

என் அப்பா - அம்மாவின் திருமணம் நடந்த கதையைப் பெரியப்பா சுவாரஸ்யமாகப் பலமுறை கூறக்கேட்டு ரசித்திருக்கிறேன்...... அந்தத் திருமணத்தில் பெரியப்பாவின் பங்கு அத்தனை அலாதியானது...! பெரியப்பா இப்போது இல்லை என்று அலைபேசியில் நான் கேட்ட வலிமிகுந்த அந்தக் கணத்தில் நான் என்னை மிகவும் முதியவனாக உணர்ந்தேன் காரணம் கடைசியாக அவருடன் பேசியபோது கூட என்னை ஒரு குழந்தையாகத்தான் அணுகினார் பெரியப்பா! என் பார்வையில் பெரியப்பா என்றுமே ஒரு சாதாரண மனிதர் அல்ல.... உள்ளும் புறமும் வசீகரமான ஒரு மேக்னடிக் பெர்சனாலிடிக்கு சொந்தக்காரர் அவர்! 

வாழ்க்கையைப் பெரியப்பா அணுகும்விதம், மூன்றே மூவ்களில் செக் வைத்துவிடும் ஒரு செஸ் க்ராண்ட் மாஸ்டரைப் போன்றுதான் தெரிந்திருக்கிறது எனக்கு! காரணம் தேவையற்ற எண்ணங்களால் தேங்கி நின்றுவிடும் ஒரு சராசரி ஃபேமிலிமேனாக அவர் தன்னை சுருக்கிக்கொள்ளவில்லை.... The most practical thinker என்றுதான் பெரியப்பாவைப் பார்த்திருக்கிறேன்.. எனக்குத் தெரிந்தவரை, பெரியப்பா "NO" சொல்லவேண்டிய இடங்களில் "YES" சொல்லியிருக்கவே மாட்டார் என்றுதான் நினைக்கிறேன்... அவர் தனது மனதைத்தான் பேசுவார்! அவரது சுயத்துக்கும் மனதிற்கும் அதிக இடைவெளி இருப்பதுபோல் யாருமே உணர்ந்திருக்க மாட்டார்கள் அதனாலேயே இயல்பாகவே அத்தனை பேரையும் தன் நட்பாலும் நேசத்தாலும் கவர்ந்திருந்தார்! மிகுதியான பேரன்பைவிட யதார்த்தனமான அன்பு அதி உன்னதமானது! அப்படியானதுதான் பெரியப்பாவின் அன்பு என்று பலமுறை உணர்ந்திருக்கிறேன். 

வயதால் அவரை அடக்கிவிட முடியவில்லை! மகன்களுடன் தோழமையாக உறவாடும் தந்தைகள் நம்மிடையே உண்டு ஆனால் மகன்களின் நண்பர்களும் இவருக்குத் தனிப்பட்ட முறையில் நண்பர்கள்! அவர்களது காதல், திருமணம், வேலை உட்படப் பல அணுக்கமான வாழ்வியல் முடிவுகளை எடுக்க அக்கறையுடன் நுணுக்கமான யோசனைகளை ஒரு நண்பனாகப் பெரியப்பா பகிர்ந்த பல தருணங்களை அறியக் கேட்டிருக்கிறேன்! பேரன்களின் தோழர்களுடனும் கூட அவர் தெளிவான தோழமை பாராட்டியிருக்கக்கூடும் என்றுதான் நினைக்கிறேன்! அதற்கு நான் கிரஹிக்கும் காரணம் பெரியப்பா ஒரு preacher அல்ல a great listener! அதையும் தாண்டி மிகவும் விரிவான reader! காலம் மிகவும் கஷ்டப்பட்டுக் கள்ள ஆட்டம் ஆடித்தான் பெரியப்பாவைக் கட்டுப்படுத்த முனைந்தது! அவரது இளமையை அவர் வயதால் உணரவில்லை மனதால் உணர்ந்திருந்தார்... ரிட்டையர்டு ஆனப் பிறகுகூட பெரியப்பாவின் ட்ரெஸ்ஸிங்கும் அவருக்கு மிகவும் பிடித்தமான கூலர் க்ளாஸ்கள் அணியும் ஸ்டைலிலும் எந்த மாற்றமும்  நிகழவில்லை! யமஹாவுடனான பெரியப்பாவின் நட்புக்குக் கடிவாளங்கள் இருந்ததில்லை! மதுரையின் எந்த பிஸியான சாலையிலும் இயல்பாகத் தன் பைக்கில் பெரியப்பா என்னைக் கடந்து சென்ற தருணங்கள் பலநூறு முறைகள் இருக்கும்... நான் சைக்கிள் ஓட்டிய காலத்திலிருந்து கார் பார்க்கிங் செய்யத் தடுமாறிய காலங்கள் வரை இது சாதாரணமாக நிகழும்! ஒரு கட்டத்திற்குமேல் அதிகம் சந்திக்கவில்லை ஆனால் இப்படியாக ரோட்டிலும் அவர் நெடுநாட்கள் நடைப்பயிற்சி மேற்கொண்ட அரசரடி க்ரவுண்டிலும் பெரியப்பாவைத் தூரத்தில் பார்த்த கணங்கள் எவ்வளவோ உண்டு! He always radiated his positivity!

 காலம் தன் "முதுமை" எனும் கொடிய ஆயுதத்தைப் பல கோணங்களில் வீசிப்பார்த்தும் அதை அலட்சியமாகத் தன் லெஃப்ட் ஹேண்டால் டீல் செய்தார் என்றுதான் சொல்வேன்... கருணையற்ற காலமோ தன் கள்ள ஆட்டத்தைப் பிரயோகித்தது சாலை விபத்து எனும் பெயரில்! அந்தக் கொடிய சாலை விபத்துகளும் அதன்பின்னான வலிமிகுந்த சிகிச்சைகளால் ஏற்பட்ட அசௌகரியங்களும்தான் பெரியப்பாவின் இயல்பான உற்சாகத்துக்குத் தொடர்ந்து தொல்லை கொடுக்கத் துவங்கியது என்று நினைக்கிறேன்....! தொண்ணூறு வயதை எல்லாம் தொட்டுப்பார்த்து எப்படி ருசிக்கிறது என்று சொல்லியிருக் கூடிய எவர்கிரீன் இளைஞர் அவர்...! என்றும் சொல்வேன் சந்தேகமின்றி, வயதுடனான போரில் வென்றது நிச்சியம் அவர்தான் என்று!

ஒரு கிறிஸ்துமஸ் இரவில் பெரியம்மாவின் இறப்புச் செய்தி வந்தது.... கம்பீரமான பெரியம்மாவை இறுதியாகப் பார்க்கப் போயிருந்த அந்த இரவில்தான் தளர்வு எனும் உணர்வை முதன்முறை பெரியப்பாவிடம் பார்த்தேன்.... ஒரு பக்கத்துவீட்டுப் பொடியனாகப் பெரியப்பாவையும் பெரியம்மாவையும் நான் பார்த்தபோது அவர்கள் இருவரும் ஃப்ரெண்ட்லியாக எனக்குத் தெரியவில்லை ஆனால் எனக்கு ஓரளவுக்கு முதிர்ச்சி வந்தபின்புதான் அவர்கள் இருவருக்குமிடையே இருந்த புரிதல் ஒரு non-verbal கவிதையாகப் புலப்படத் துவங்கியது! இருவரும் அதிகம் பேசிக்கொள்வது போன்றே தெரியாது ஆனாலும் ஓர் அழகான கம்யூனிகேஷன் இருவருக்குமிடையே உயிர்ப்புடன் இருப்பது தெளிவாய்த் தெரியும்! பெரியப்பாவை care செய்துகொண்டே இருக்கும் பெரியம்மாவையும்... பெரியம்மாவுக்கு அவரது உள்ளுணர்வில் சின்னதொரு சங்கடம் வந்தாலும் அதை சென்ஸிடிவ்வாக உணர்ந்துகொள்ளும் பெரியப்பாவையும் பார்த்திருக்கிறேன்.... இப்போது இருவருமே இல்லாத அவர்களது வீட்டுக்குப் போக மனதைத் தயார்படுத்த வேண்டியிருக்கிறது!

என் அப்பாவின் பணி ஓய்வு விழாவில் பெரியப்பா பேசியதும் அப்பாவுக்கு அணிவித்த பொன்னாடையை என்னுடைய அம்மாவுக்குப் பெரியப்பா பாசத்துடன் அணிவித்த அந்த ஆனந்தமான தருணமும் அதன் இன்பத்துடனேயே உறைந்திருக்கிறது ஒரு புகைப்படமாக! எத்தனை ஆண்டுகளானாலும் எத்தனையோ நினைவுகளை அதிர்வுகளாய் எண்ணங்களுக்குள் ஊடுறவச்செய்யும் வல்லமை பெற்றது அந்தப் புகைப்படம்! என்னுடைய வயது முப்பதைத் தொட்ட போது என் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கால் செய்த பெரியப்பா... "உனக்கு முப்பது வயசாகிடிச்சேடா.... சின்னப் பையனேடா  நீ!"என்று சொன்ன அந்த சொற்களும் என் அப்பாவை "ஃப்ரான்சிஸு.." என்று அவர் வாஞ்சையோடு அழைப்பதும் ஏனோ நேற்றிலிருந்து அவரது கணீர் குரலில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது அகத்துக்குள்!

குமார் அண்ணனுடனும் சிவா அண்ணனுடனும் பெரியப்பா பழகும் விதமும் அவர்கள் மூவரும் பகிர்ந்துகொள்ளும் நட்புமுறைகளும் அவ்வளவு practicalஆக இருக்கும்! நடைமுறை யதார்த்தங்களை சாதாரணமாகப் பகிர்ந்துகொள்ளப் பழகிய நல்ல நண்பர்கள் அவர்கள்!

ஒரு கட்டத்தில் பெரியப்பாவின் கேட்கும் திறன் மிகவும் குறைந்து சிரமப்பட்டார் என்று கேள்வியுற்றேன்.... இப்போது எல்லோருடைய மனக்குரல்களையும் கேட்கும் வல்லமை பெற்றுவிட்ட பெரியப்பாவுக்கு அவர் தனது இயல்பால் இடம்பிடித்திருந்த அத்தனை மனங்களின் குரல்களிலும் அவர்மீதான பாசமான பேச்சுக்களை எவ்விதக் கஷ்டமுமின்றிக் கேட்டுக்கொண்டிருப்பார்.... அந்தப் பாசமும் அன்பும் தோழமையும் முழுக்க முழுக்க அவர் சம்பாதித்தது! I have never seen you within the boundaries of an average person..... You're too great பெரியப்பா!

The bonding we share between our families is stronger than a blood relation!

Take care பெரியப்பா..... You'll live forever in our thoughts...

My love to Kumar Anna, Siva Anna, Vasuki Akka, Shanthi Akka and family....

அன்புடன்,

பிரபு எம்