Thursday, March 28, 2019

டாக்டர். மயிலிசை நடிக்கும் "கடல் தாமரை" (2019) - கற்பனை திரைவிமர்சனம் 😁😁

கடல் தாமரை 🌷😜 - (கற்பனை திரைவிமர்சனம்)




நடிப்பு: டாக்டர். மயிலிசை , கன்னியாகுமரி ஆனந்தன், நீர்மாலை ஆத்தாராமன், "ஹட்ச்" தாஜா, சௌக்கிதார் சிங்காரம் மற்றும் சிலர்

ஓளிப்பதிவு: ஆன்ட்ராய்டு ஃபோன் கேமராவில் பலபேர் எடுத்திருக்கிறார்கள்

இசை: படத்துக்குப் பின்னணி இசை என்று தனியாக இல்லை

தயாரிப்பு: தமிழக பாஜக பேனரில் தன் சொந்த செலவில் மயிலிசையேதான் தயாரித்திருக்கிறார்!

இயக்கம்:  யார் பெயரும் போடவில்லை (எ ஃபிலிம் பை "எல்லாம் அவன் செயல்" என்று என்டு கார்டு போடுகிறார்கள்)


தென்சென்னைப் பகுதியில் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்போவதாக டாக்டர். மயிலிசை அறிவித்திருந்த "கடல் தாமரை" திரைப்படம் தேர்தல் ரிலீஸாக வெளியிட வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள்..... தென்சென்னையில் ஆளுங்கட்சியினர் படம் எடுப்பதால் ஷுட்டிங் பர்மிஷன் கொடுக்கவில்லை எனவே அவர்கள் ஏற்கெனவே "ஷுட்டிங்" செய்து பலபேரைக் கொன்ற ஏரியாவான தூத்துக்குடியில் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையில் படத்தை எடுத்து வெளியிட்டிருக்கிறார் டாக்டர். மயிலிசை!

அன்பான அப்பா கன்னியாகுமரி ஆனந்தனின் மகளாக வரும் மயிலிசைக்கு அந்த ஏரியாவின் ஆத்தா அப்பத்தா அத்தனை பேராலும் சிக்கெடுக்க முடியாததொரு சிகையாகத் தலைமுடி வளர்ந்திருக்கிறது... இருந்தாலும் அதுவும் ஓர் அழகாகவே இருக்க,  தினமும் மல்லிகைப் பூ வாங்கித் தருகிறார் அவரது அன்பான அப்பா.... காலையில் வைக்கும் மல்லிகைப் பூ சாயங்காலம் வாடிய பின்பும் தலையிலிருந்து அதை எடுப்பதற்கு அரைமணி நேரம் ஆவதால் தன் மகளைப் பற்றிக் கவலைப் படுகிறார் கன்னியாகுமரி ஆனந்தன்! திடீரென ஒருநாள் மயிலிசை ஒரு தாமரைப்பூவுடன் வந்துத் தன் தந்தையிடம் இனிமேல் தான் தாமரைப் பூவைத்தான் சூடிக்கொள்ளப் போவ‌தாகத் தெரிவிக்கிறார்.. இதனால் மனமுடைந்து போகும் கன்னியாகுமரி ஆனந்தன் விரக்தியில் வெளியூர் சென்று விடுகிறார்.... தாமரைப் பூ வைத்ததிலிருந்து அந்த ஊரில் யாருக்குமே மயிலிசையைப் பிடிக்காமல் போனாலும் தாமரைப் பூவிற்கு மயிலிசையை மிகவும் பிடித்துப்போய்விடுகிறது காரணம்  கதைப்படி இந்தத் தாமரை மயிலில் (சென்சாருக்காக ஸ்பெல்லிங்கை மாற்றியிருக்கிறார்கள்!) தான் மலர்கிறது!

இதற்கிடையே டெல்லியில் இருக்கும் தாமரை மன்னர் "சவுக்கிதார்" சிங்காரத்தை, சிங்காரத்தின் விருப்பம் இல்லாமலேயே தன்னுடைய வளர்ப்புத்தந்தையாக தத்தெடுத்துக்கொள்கிறார் மயிலிசை... சவுக்கிதார் சிங்காரமும் மயிலிசையை வேண்டா வெறுப்பாக "ஜித்து" என்று செல்லப் பெயர் வைத்து அழைக்கிறார்...இப்போது சவுக்கிதார் சிங்காரத்துக்காகத் தமிழ் நாட்டில் குளம்வெட்டித் தாமரை வளர்க்க முடிவுசெய்கிறார் ஜித்து (எ) மயிலிசை. தாமரை வளரும் வாய்ப்புள்ள சிலபல சுமாரான இடங்களையெல்லாம் படத்தில் வரும் சின்னச் சின்ன கதாபாத்திரங்களான நீர்மாலை ஆத்தாராமனும், "ஹட்ச்" தாஜாவும் ஆக்கிரமித்துக்கொள்ள தூத்துக்குடிக்கு வருகிறார் மயிலிசை! அங்கே ஒரு கலவரம் நடக்கிறது அதில் ஆயிரம் பேரைக் காப்பாற்றுவதற்காகச் சில சமூக விரோதிகளைக் கொல்கிறார்கள்.. ஆனால் ஆயிரம் பேரைக் காக்க நினைத்த‌ மயிலிசையின் நல்ல உள்ளத்தைப் புந்துகொள்ளாமல் மக்கள் அவரை ஊருக்குள் தாமரைக் குளம் வெட்ட அனுமதிக்காமல் துரத்தியடிக்கிறார்கள்... பற்பல தடைகளைத் தாண்டி... இடையே சிலபல ட்விஸ்ட்டுகளைத் தாண்டி இறுதியில் தூத்துக்குடியின் கடல் பகுதியில் நடுக்கடலில் அலைகளுக்கு இடையே (க்ராஃபிக்ஸில்)பல  தாமரைப்பூக்களை மலரவைத்துப் படத்தை முடித்திருக்கிறார்கள்!!

மயிலிசையின் குணச்சித்திர நடிப்பு நம்மைப் பாராட்டவும் வைக்கிறது பரிதாபப்படவும் வைக்கிறது! தாமரைக் குளம் வெட்ட இடமிருக்கும் இடங்களை நீர்மாலைக்கும், தாஜாவுக்கும் விட்டுக்கொடுக்கும் காட்சிகளில் உள்ளே சோகத்தையும் வெளியே சிரிப்பையும் ஒருசேரக் காட்டி அசரடிக்கிறார்! ஆரம்பத்தில் காமெடி செய்தாலும் தாஜா திடீரென அதிரடிக் காட்சிகளில் களமிறங்கி ஆச்சர்யப்படுத்துகிறார்! ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளிலெல்லாம் அவருடைய அட்மினை வைத்து 'டூப்' போட்டுப் படமாக்கியிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது!  இண்டர்வெல்லுக்கு அப்புறம் திடீரென ரீ-என்ட்ரி கொடுக்கும் கன்னியாகுமரி ஆனந்தன் மயிலிசையிடம் உருக்கமாக, " நீ என் புள்ள.. உன்னை ஒரு பலி ஆடாத்தான் சவுக்கிதார் சிங்காரம் வளக்குறாரு"ன்னு சொல்லுற இடத்தில் திரைக்கதை வேகம் எடுக்கப் போகிறது என்று நாம் எதிர்பார்க்கிறோம் ஆனால் அந்த இடத்தில் சம்பந்தமே இல்லாமல் கேமராவைப் பார்த்து மயிலிசை கண்களை எல்லாம் விரித்து உடம்புக்குள் ஆத்தா புகுந்துவிட்டது போல ரியாக்ஷன் கொடுத்து கேமராவைப் பார்த்து பஞ்ச் டயலாக் பேசுகிறார்.. " நான் பலி ஆடு இல்லடா..... பனங்காட்டு நரி...." ஊஊஊஊஊ என்று பயங்கரமாக ஊளை இட்டுக்கொண்டே தூத்துக்குடி முழுக்க சுற்றிவருகிறார்.... இடையில் இஸ்லாமியர்களைக் கவரும் விதமாகச் சில காட்சிகளில் அவர் பர்தா அணிந்து மாறுவேடத்தில் வருவதும் பின்பு அதைத் துறந்துவிட்டுத் தான் யாரென்று காட்டும் காட்சியில் அவரது ஃபேஸைப் பார்த்து மெயின் வில்லனுக்கு ஹார்ட் அட்டாக் வருவதும் பிரபுதேவா நடித்த பழைய "விஐபி" படத்தில்  மணிவண்ணன் மனைவியாக வரும்  "பீவி" கேரக்டரை நினைவுபடுத்துகிறது.... படத்தில் கிராஃபிக்ஸும் சரியில்லை... ஒரு காட்சியில் கடும் மழையில் மயிலிசை ஒரு பெண்ணிற்குப் பிரசவம் பார்க்கும் காட்சியில் அது நிறைமாத வயிறே இல்லை வெறும் தொப்பை என்று தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது! மேலும் சுட்டுக் கொல்லப்படும் சமூக விரோதிகள் கேரக்டருக்கு ஸ்கூல் படிக்கும் அப்பாவிப் பெண்குழந்தைகளை எல்லாம் பயன்படுத்தியிருப்பது இயக்குனரின் அலட்சியத்தைக் காட்டுகிறது!

இறுதிக் காட்சியில் க்ராஃபிக்ஸில் நடுக்கடலில் தாமரைப் பூக்கள் மலர்வதாகக் காட்ட மிகவும் மெனக்கிட்டிருந்தாலும் சுற்றி வேடிக்கை பார்க்கும் பல லட்சம் ஜுனியர் ஆர்டிஸ்ட்டுகள் எல்லாரும் அவர்கள்பாட்டுக்குக் கதை பேசிச் சிரித்துக் கொண்டிருப்பது நம்மையும் படத்தோடு ஒன்றவிடாமல் செய்துவிடுகிறது!

ஓளிப்பதிவு, இசை, எடிட்டிங் என எல்லாவற்றையுமே கைக்காசைப் போட்டு மயிலிசையே கிடைத்த ஆட்களை வைத்து செய்திருக்கிறார்.... ஏனோதானோவென இருக்கிறது! டெல்லியிலிருந்து ஃபோட்டோஷாப்பில் டிசைன் செய்யப்பட்ட போஸ்டர்கள் மட்டும் படு சூப்பராக இருக்கிறது!

மொத்தத்தில் தேர்தல் ரிலீஸ் படங்களில் மயிலிசையின் "கடல் தாமரை"யைத் தியேட்டருக்குச் சென்று குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டுக் குடும்பமாகச் சென்று பார்த்து சிரித்து மகிழுங்கள்!

Wednesday, March 27, 2019

"செளக்கிதார்" - டீக்கடை டூ DRDO சயின்டிஸ்ட்: A Biopic😃😃




நம்ம சௌக்கிதாரு அய்யாவோட  பயோபிக்-கைத் தமிழ்ல படு கமர்ஷியலா பண்ணுறோம்! அவருகிட்ட ஓரு அதிமுக ஓ ஸாரி அறிமுக இயக்குனர் கதை சொன்னபோது......



ஓபன் பண்ணா ஃபர்ஸ்ட்டு சீன்-ல‌.... டெல்லி-ல முரட்டு வெயில்ல ஒரு கேட் வாட்ச்மேன் வேலைக்கு இண்டர்வியூக்கு நீங்க போறீங்க சார்....  அப்போ இண்டர்வியூ பண்ணுறவரு உங்கள பாத்து, "அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி டீக்கடை வெச்சிருந்தேன்னு உங்க ரெஸ்யூம்ல போட்டிருக்கு இப்போ வாட்ச்மேன் வேலைக்கு வந்திருக்கீங்க?"னு கேக்குறாரு.... அப்போ நீங்க கேமராவப் பாத்து ஆடியன்ஸப் பாத்து கண்ணடிச்சு சிரிக்கிறீங்க! உடனே பாகிஸ்தானுக்குள்ள ஃப்லைட்டெல்லாம் பறந்து போய் குண்டுபோடுற ஸீனெல்லாம் அனிருத் மியூசிக்-ல போட்டுப் பொளக்குறோம்!
அடுத்து அவர் மறுபடியும் உங்களப் பாத்து கேக்குறாரு... "என்னங்க ரெஸ்யூம்ல ஃபர்ஸ்டு பேஜுல கல்யாணம் ஆனவருன்னு போட்டிருக்கு, கடைசி பக்கத்துல சிங்கிள்னு போட்டிருக்கீங்க"ன்னு கேக்குறாரு.... அப்போ உங்க மூஞ்சிய க்ளோஸ்-அப்புல காட்டுறோம்.. உங்க கண்ணு கலங்கி மேல பாக்குறீங்க.. "முதல் மரியாதை" படத்துல ராஜா சாரோட வயலின பேக்ரவுண்டுல வாசிச்சு படத்துல ஒரு ஃப்ளாஷ் பேக் இருக்குன்னு ஆடியன்ஸை இப்போவே ஒரு மிரட்டு மிரட்டி வைக்கிறோம்! திரும்பவும் இன்டர்வியூ பண்ணுறவரு, "என்னங்க டிகிரி படிச்சிருக்கேன்னு போட்டிருக்கீங்க, டிகிரி சர்டிஃபிகேட் ஃபைல்-ல இல்லையே?"ன்னு கேக்குறாரு.... அப்போ நீங்க கோபமா அவரைப் பாக்குறீங்க..... டேபிள ஒரு தட்டுத் தட்டிட்டு கோபமா எந்திருச்சு உள்ள போறீங்க.... பரபரப்பா மியூஸிக் போடுறோம் உங்களையும் சிங்கத்தையும் மாறி மாறி காட்டுறோம்.... பாத்தா அது ஒரு விண்வெளி நிலையம்.... நீங்க உள்ள போறீங்க எல்லா சயின்டிஸ்ட்டும் உங்கள அதிர்ச்சியோட பாக்குறாங்க... இண்டர்வியூ பண்ணவரு உங்க பின்னாடியே வர்றாரு.. "சார்.. சார் ஹலோ நில்லுங்க சார்.....' இந்த மாதிரி யாரும் உள்ள வந்திடக்கூடாதுன்னுதான் சௌக்கிதார்னு ஒரு வாட்ச்மேனுக்கு யூனிஃபார்ம் தைச்சு கேட்டுக்கு வெளிய நிக்க வைக்கிறோம்... அந்த இன்டர்வியூவுக்கே வந்துட்டு நீங்களே உங்க‌ பாட்டுக்கு உள்ள போயிட்டு இருக்கீங்க.... சார் நில்லுங்க சார்"னு உங்க பின்னாடியே பதற்றமா ஓடி வர்றாரு... ஆனா உங்க வேகம் பயங்கரமா இருக்கு... அப்போதான் ஒரு ரூமுக்குள்ள நீங்க போறீங்க அங்கே நிறைய கேமரா இருக்கு.. கேமராவப் பாத்தவுடனே உங்க‌ ஃபேஸ் அப்படியே ஃப்ரெஷ்ஷாகிடுது அத நம்ம க்ளோஸ்-அப்புல காட்டுறோம்...... உள்ளே மேக்-அப் ரூமுக்குப் போய் 10 லட்ச ரூபாய்க்கு ப்ரொடியூசர் காசுல (ஜி.எஸ்.டி ரெண்டு லட்சம் சேர்த்து)  வாங்கிவெச்ச ஒரு சூட்டைப் போட்டுக்கிட்டு வந்து உக்காந்து.... "விண்வெளியில நீங்க லாஞ்ச் பண்ண ஒரு பயங்கரமான சாட்டிலைட் வெப்பன் பத்தி செம சயின்டிஃபிக்கா சுத்தி இருக்குற ஃபாரினர்ஸ் கிட்ட எல்லாம் நீங்க ஒன் ஹவருக்கு ஹிந்தில பேசுறீங்க.... மறுபடியும் மியூசிக் போட்டுப் பொளக்குறோம்!

இப்போ அந்த இன்டர்வியூ எடுத்தவரு.. உங்கள பாத்து , "வாட் எ மேன்... யாரு இவரு? டீக்கடைக் காரரா? வாட்ச் மேனா? மாஸ் ஹீரோவா? இல்ல ஸ்பேஸ் சயின்டிஸ்டா"?னு யோசிச்சிக்கிட்டே, மெர்சலாகி வாயப் பொளக்குறாரு....

அப்போதான் போடுறோம் சார் இண்டர்வெல் ப்ளாக்.....

எப்புடி சார் கதை??!!! செகண்ட் ஹாஃப்-ல நிறைய பாட்டு இருக்குது சார்.. நம்மளே நாஞ்சில் சம்பத் மாதிரி யார்கிட்டயாவது பாட்டெழுதி வாங்கிக்குவோம் போஸ்டர்ல கண்ணதாசன், வாலி, வைரமுத்துன்னு போட்டு மார்க்கெட்டிங் பண்ணிக்கலாம்! வேணும்னா சேக்கிழார், கம்பர்னு கூட போட்டுக்கலாம் சார்!

அன்புடன்,
பிரபு.எம்