Showing posts with label மீடியா. Show all posts
Showing posts with label மீடியா. Show all posts

Monday, March 02, 2020

ஜாலியன் வாலாபாக் சமயத்தில் தற்போதைய மீடியா இருந்திருந்தால்.........

இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது ஜெனரல் டயர் என்ற கோழையால் கொடூரமான முறையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட அகோர வன்முறை சம்பவமான ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தபோது இப்போதுள்ள மீடியாக்கள் மற்றும் சோஷியல் மீடியா இருந்திருந்தால்..... என்று ஒரு கற்பனை.... இது  நகைச்சுவை பதிவு அல்ல என்பதை சோகத்துடன் சொல்லிக்கொள்கிறேன்!

ஜாலியன் வாலாபாக் சம்பவம் நடந்துவிட்டது அதன் முதல் ரிப்போர்ட்  ஒரு செய்திச் சேனலில்.......

காக்க..காக்க படத்தின் டைட்டில் இசையைப் போன்றதொரு வேகமான இசையை பேக்ரவுண்டில் போட்டுக்கொள்க.... ஒரு ரெட் கலர் பேக்ரவுண்டில் சுமார் இருபது நிமிடங்களுக்கு..... ப்ரேக்கிங் நியூஸ் என்று கொட்டெழுத்தில் வந்து வந்து போகும்....

பிரேக்கிங் நியூஸ்: 

ஜாலியன் வாலாபாக்கில் வன்முறை! போலீஸ் துப்பாக்கிச்சூடு......

சுதந்திரப் போராட்டக்காரர்கள் நடத்திய கூட்டத்தில் போலீஸ் தாக்குதல்.... துப்பாக்கிச்சூடு நடந்திருப்பதாகத் தகவல்!


பக்கத்து சேனலில் ”திருடா... திருடா...” பட தீம் மியூஸிக் போல வேறொரு டெரர் மியூசிக்குடன்....

பிக் பிரேக்கிங்....

ஜாலியன் வாலாபாக்கில் போலீஸூக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல்..... துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி பலர் படுகாயம்... பலி எண்ணிக்கை உயரலாம் என அச்சம்!

சேனல்-1 ல் செய்தியாளர்:  ஜாலியன் வாலாபாக்கிலிருந்து முதல் காட்சிகள் வெளிவந்திருக்கின்றன அவை உங்கள் பார்வைக்கு.....

காட்சி: துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்துக்கு அருகில் கேமரா வைக்கப்பட்டுள்ளது... தரையில் ரத்தக்கறைகளும் பத்துப் பதினைந்து தோட்டாக்களின் ஷெல்களும் தெரிகின்றன... அடுத்த ஃபுட்டேஜில்  நான்கைந்து சடலங்கள் அப்புறப்படுத்தப் படுவது தூரத்தில் தெரிகிறது.... போலீஸ் இங்குமங்கும் ஓடுகிறார்கள்....
பத்திரிக்கையாளர்களைப் போலீஸ் விரட்டுகிறார்கள்......

இந்த ஐந்து ஃபுட்டேஜ்களை 24 முறை ஒளிபரப்புகிறார்கள்...

பேக்ரவுண்டில் செய்தியாளர்: காவல்துறை எச்சரிக்கையையும் மீறி இன்றும் ஜாலியன் வாலாபாக்கில் போராட்டக்காரர்கள் பெருமளவில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது... அப்போது காவல்துறை அவர்களைக் கலைந்து செல்லுமாறு கூறியபோது அங்கு லேசான மோதல் நடைபெற்றதாகத் தெரிகிறது அதன்பிறகு ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்க காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாகத் தெரிகிறது... உறுதியான தகவல்களைத் தெரிந்துகொள்ள எமது செய்தியாளர் சம்பவ இடத்துக்கு விரைந்திருக்கிறார் விரைவில் அவரிடம் நேரடியான விவரங்களை அறிந்துகொள்ளலாம்....

சேனல்-2ல் ஓர் அரங்கு அமைக்கப்பட்டுவிட்டது.......

மூத்த பத்திரிக்கையாளர்..
சுதந்திரப் போராட்டக்காரர்
காந்தியவாதி
பிரிட்டிஷ் ஆதரவாளர்
பிரிட்டிஷ் இண்டியாவின் ஓய்வு பெற்ற கலெக்டர்

அமர்ந்திருக்கிறார்கள்......

தொகுப்பாளர்: ஜாலியன் வாலாபாக் போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து அங்கு நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 8 பேர் பலியாகியிருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது... இது மேலும் உயரக்கூடும் என்றும் தெரிகிறது.... நான் முதலில் சுதந்திரப் போராட்டக்காரரிடமிருந்து ஆரம்பிக்கிறேன்... (அவரை நோக்கி) வணக்கம்... நீங்க இந்த சம்பவத்தை எப்படிப் பாக்குறீங்க ?

சுதந்திரப்போராட்டக்காரர்: என்ன சார் வன்முறை, துப்பாக்கிச்சூடுனு சொல்லுறீங்க? போராட்டத்துல எங்கசார் வன்முறை நடந்துச்சு?? அமைதியா போராடுன மக்களைக் கொடூரமா சுட்டுக்கொன்னுருக்காங்க ஜாலியன் வாலாபாக் படுகொலைன்னு சொல்லாம ஜாலியன் வாலபாக் வன்முறை சம்பவம் - போலீஸ் துப்பாக்கிச்சூடுன்னு சொல்லிட்டு இருக்கீங்க...

பிரிட்டிஷ் ஆதரவாளர்: சார்... வன்முறை நடக்கலைன்னு எப்படி சொல்லுறீங்க? போனவாரம் போராட்டம் நடக்குறதுக்கு முன்னாடி மூணு பிரிட்டிஷ் அதிகாரிகளைத் தாக்கத் திட்டம் போட்டு வாட்ஸப்-ல பரப்பியிருக்காங்க... போராட அனுமதி மறுத்ததுக்கு அப்புறமும் இத்தனை பேர் ஓரிடத்தில் குவிஞ்சா எந்த நேரமும் வன்முறையாக மாறக்கூடிய வாய்ப்பு இருக்குது சார்... சட்ட ஒழுங்கை அப்புறம் யார் பாதுகாக்குறது??

 நெறியாளர்: (சுதந்திரப் போராட்டக்காரர் மற்றும் காந்தியவாதியை அமைதி காக்க சொல்கிறார்) சரி இந்தப் போராட்டத்துக்கு முறைப்படி அனுமதி வாங்கலன்னு ஒரு விஷயத்தைப் பதிவு செய்கிறார்  நம்ம நண்பர்.... இதை நீங்க எப்படிப் பாக்குறீங்க சார்....

பிரிட்டிஷ் இண்டியா முன்னாள் கலெக்டர்: ப்ரோட்டாக்கால் படி ஒரு போராட்டத்துல துப்பாக்கி சூடு நடந்திருக்குன்னாலே அங்க கலவரம் தூண்டப்பட்டிருக்குன்னு தான் அர்த்தம்.. சும்மா உணர்ச்சிவசப்பட்டுப் பேசுறதுல அர்த்தம் இல்ல... தன்னிச்சையா முடிவு பண்ணி இப்படி ஒரு துப்பாக்கிச்சூடு நடத்திட முடியாது.... கலவரத்தைத் தூண்டும்படியா அங்க சம்பவங்கள் நடந்திருக்கும் நிச்சியமா....

இப்படியாகப் பேசிக்கொண்டிருக்கும்போது அடுத்த ப்ரேக்கிங் நியூஸ்:

ஜாலியன் வாலாபாக் வன்முறையில் துப்பாக்கிச்சூடு: நாடு முழுவதும் பல்வேறு வன்முறை சம்பவங்கள் - அவசர நிலை பிரகடனம்...
போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்காமல் அறவழியில் போராடுமாறு ட்விட்டரில் காந்தி வேண்டுகோள்!


இதனையடுத்து ஃபேஸ்புக்கில் “ நாட்டாமை” பட மிக்சர் மீமில் காந்தியை வைத்து அதிக அளவில் மீம்கள் பகிரப்பட்டு வைரல் ஆகிறது...
பொறுத்தது போதும் பொங்கி எழு தீமிலும் பல்வேறு மீம்கள் வைரல் ஆகிறது.....

#மிக்சர் காந்தி என்று ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்யப்படுகிறது..
#I_stand_with_Gandhi என்று இன்னொரு ஹேஷ்டேக்கும் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகிறது...
#கொலைகார_பிரிட்டிஷ்_அரசு என்று ஒரு ஹேஷ்டேக் சர்வதேச அளவில் ட்ரெண்ட் ஆக பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாகவும் சில ஹேஷ்டேக்குகள் இந்தியாவில் அரசு ஆதரவாளர்களால் ட்ரெண்டாக்கப் படுகிறது....(#கொலைகார_பிரிட்டிஷ்_அரசுஹேஷ்டேக் பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தானிலிருந்து உருவாக்கப்பட்டிருப்பதாக  பிரிட்டிஷ் அரசு ஆதரவாளர்கள் பேட்டி கொடுக்கிறார்கள்!)

உயிரிழந்தோர் எண்ணிக்கை இப்போது 100 ஐத் தாண்டிவிட்டது....

சமூக வலைதளங்களும் சேனல்களும் பயங்கர பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றன....

நிற்க......

இதற்குமேல் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பதை சமகாலத்தில் மீடியாக்களோடும் சமூக வலைதளங்களிலும் தொடர்பில் இருப்பவர்களால் எளிதில் கிரஹித்துக் கொள்ள முடியும்!

ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஏப்ரல் 13, 1919ம் ஆண்டு இருந்த தொழில் நுட்ப வளர்ச்சிக்கு அந்த சம்பவம் பற்றிய செய்தி தமிழகம் வந்து சேர்வதற்கே ஒரு வாரம் கூட ஆகியிருக்கலாம்! ஆனாலும்கூட வரலாற்றில் எவ்விதக் குழப்பமும் இல்லாமல் ஜாலியன் வாலாபாக் படுகொலை (Jalian Wala Bhag Massacre) என்று தெளிவாகப் பதிவாகியிருக்கின்றது அந்த சம்பவம்!  அன்றைய செய்திகள்தான் இன்றைய வரலாறுகளாக நமக்கு பதிந்து தரப்பட்டுள்ளது... ஆனால் இன்றைய செய்திகள் நாளைய தலைமுறைக்கு எப்படிப்பட்ட வரலாறுகளாக போய்ச் சேரும் என்று யோசித்துப் பார்த்தால் அவரவர் சார்ந்திருக்கும் கட்சி, சித்தாந்த, சாதி மற்றும் மத சார்பு நிலைகளுக்கு ஏற்றவாறு,  நாட்டில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்துக்கும், தரவுகளைத் தரும் மீடியாக்களும் இணையதளப் பதிவுகளும் தாரளமாய்க் கிடைக்கின்ற சமகாலத்தில் வாழ்ந்துவரும் நமக்கு சிரிப்பதா அழுவதா என்று இனம் புரியாத உணர்வுதான் எழுகிறது!

ஒரு சாதாரண மனிதன்கூட நொடிக்கு நொடி நடக்கும் சம்பவங்களை லைவ் டெலிகாஸ்ட் செய்யும் அளவு வளர்ந்துவிட்ட மீடியா தொழில் நுட்பத்தினால் செய்திகளும் தகவல்களும் வேகமாகப் பரவுகிறதே தவிர துல்லியமாக சென்றடைகிறதா என்னும் கேள்விக்கு மோர்ஸ் கோடுகளிடம் , வாட்ஸப் ஃபார்வோர்டுகள் தலைகுனிந்துதான் நிற்க வேண்டும்!
வந்தந்திகள் பரப்பப் பயன்படும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தித்தான் செய்திகளைப் பகிரப் பயன்படுத்துக்கொண்டிருக்கிறோம் என்பது எவ்வளவு ஆபத்தானது?

மேலும் ஜாலியன் வாலாபாக் படுகொலை என்று இப்போது எல்லா வரலாறுகளிலும் (பிரிட்டிஷ் பதிவுகள் உட்பட) தெளிவாக இடம்பெற்றிருக்கும் அந்தக் கொடூர சம்பவம் இப்போது நடந்தால் ஒருசில மீடியாக்களின் ஆசீர்வாதத்தினால் ஜாலியன் வாலாபாக் வன்முறை சம்பவமாகவும் ஜாலியன் வாலாபாக் என்கவுண்டர் என வெவ்வேறு நாமகரணங்கள் பெற்றிருந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை என்றே தோன்றுகிறது!

பதிவின் நீளம் கருதி இதோடு முடிக்கிறேன்.....
சமகால மீடியா சாதனங்களின் மீதான பொதுப்படையான விமர்சனமாகவே இந்தப் பதிவைப் பதிகிறேன் இது தொடர்பாக உங்களின் நேர்மறை/எதிர்மறைக் கருத்துக்களையும் தயவுசெய்து பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன்.... 

அன்புடன்,
பிரபு எம்.


Tuesday, September 12, 2017

தமிழகத்தில் ஹிந்தி வளர்ந்து வருகிறதாம் - “தமிழ் இந்து” சொல்லிடிச்சு!

கடும் எதிர்ப்பு, போராட்டங்களை மீறி
தமிழகத்தில் வளர்ந்து வருகிறது இந்தி

இப்படியொரு தலைப்புடன் ஒரு செய்தியை இன்று (செப்டம்பர் 12,2017) தேதியிட்ட “தமிழ் இந்து” செய்தித்தாளில் 11-ம் பக்கத்தில் பார்த்தேன்... அது செய்தியா இல்லை விளம்பரமா அல்லது ஏதேனும் கட்டுரையா என்று பார்த்தவுடன் புரியும்படி இல்லை! சரி.. ஓர் ஒப்பீட்டுப் புரிதலுக்காகப் பக்கத்தில் இருக்கும் இன்னொரு செய்தியைப் பார்த்தேன்


காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்து சூழ்நிலை முன்னேறி உள்ளது

  • உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

என்று இருந்தது! இந்த செய்தி உறுத்தவில்லை..... “காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்து சூழ்நிலை முன்னேறி ப்ளா ப்ளா ப்ளா.... என்று தலைப்பு பார்த்தவுடனேயே செய்தித்தாள்களைப் படித்து பழக்கப்பட்ட கண்கள் சொன்னது யார் என்று தேட ஆரம்பித்தது அதற்குள் மூளையும், யாருப்பா அது பழைய ஹோம் மினிஸ்டர் ராஜ்நாத் சிங்கா அல்லது புது ராணுவ அமைச்சர்  நிர்மலாவா? என்று "probables" யோசிக்க ஆரம்பித்தது.... அங்கும் இருக்கவே இருந்தது உப தலைப்பு “உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்” என்று... ஒருவேளை இந்த ஒரு ஸ்டேட்மெண்ட்டை எதிர் முகாமிலிருந்து  ப.சிதம்பரம் போன்ற ஒருவர் சொல்லியிருந்தார் என்றால் படிப்பதற்கு ஒரு சுவாரஸ்யமாய்க் கண்கள் விரிந்திருக்கும் என்பது வேறு விஷயம்! சரி விஷயத்திற்கு வருவோம்!

இப்படித்தான் செய்தித்தாள்களுடன் உறவாடி வந்திருக்கிறோம் தலைமுறைகளாக...! தலைப்பு என்பது விஷயத்தைப் பொட்டில் அறைந்தாற்போல் சொல்லிவிடும் மேலும் யார் சொன்னது.... எந்த சூழ்நிலையில் சொன்னது போன்ற விவரங்களை உபதலைப்புகள், புல்லட் பாயிண்டுகள் போன்றவை விளக்கிவிடும்! மெயின் தலைப்புக்கு மேலே சற்று சிறிய எழுத்துருவில் அந்த செய்திக்கான பின்னணியையும் வழங்கிவிடுவார்கள். ஆக... செய்தித்தாள்களுடன் கையில் காஃபி மக்குடன் நாம் அளவளாவி மகிழும் ஓர் அரைமணி நேர ஸ்பரிசத்துக்கு என்று பலவிதப் புரிதல்களும், சமிக்ஞைகளும் உண்டு என்பதை யாரும் மறுப்பதற்கில்லை!

இப்போது மெயின் விஷயத்திற்கு வருவோம் அதாவது “தமிழகத்தில் ஹிந்தி வளர்ந்து வருகிறது” என்னும் செய்தி!

இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன், சொன்னது யார்? என்று கண்கள் தேடின... பதில் இல்லை..... சரி இது ஏதும் ஆய்வு முடிவா? தெளிவில்லை!
ஸ்போக்கன் ஹிந்தி விளம்பரமா?? பார்த்தால் அப்படித் தெரியவுமில்லை! 

தலைப்புக்கு மேலே “கடும் எதிர்ப்பு, போராட்டங்களை மீறி”

என்று ஒரு பின்னணி வேறு அச்சிடப்பட்டிருந்தது! எனக்குத் தெரிந்து தமிழகத்தில் இப்போது கடும் எதிர்ப்பு, போராட்டங்களை மீறி  நடைமுறையில் இருப்பது நீட் தேர்வு மட்டுமே! இந்தி வளர்வதற்குக் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்ற போது நான் பிறக்கவில்லை என் தந்தைகூட ஏழாம் வகுப்போ எட்டாம் வகுப்போதான் படித்துக்கொண்டிருந்திருப்பார்! 

சரி... ஏதாவது ”back to the future" சமாச்சாரம் போலிருக்கிறது என்று படித்துப் பார்த்தேன்.....

அதாகப்பட்டது......

“தமிழகத்தில் நிலவும் கடும் எதிர்ப்பை மீறி அங்கு இந்திமொழி வளர்ந்து வருவது தெரியவந்துள்ளது” என்றது முதல் பத்தி.

மேலும் அதில் உள்ள செய்தி என்னவென்றால்....

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் இந்தி இயக்குனரகத்தின் கீழ் தொலைதூரக் கல்வி மையத்தில் தொலைதூரக் கல்வி முறை மூலம் ஹிந்தி மொழி கற்றுக்கொள்ள விண்ணப்பத்தவர்களின் எண்ணிக்கைத் தமிழகத்தில் கணிசமாக (அதிகபட்சம் சுமார் 7000 பேர்!) அதிகரித்திருக்கிறதாம்!

இதுதான் செய்தி..... ஆனால் இப்போது இந்தப் பதிவின் துவக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பைப் பாருங்கள்......

”தமிழகத்தில் வளர்ந்து வருகிறது இந்தி” (அதுவும் கடும் எதிர்ப்பு, போராட்டங்களை மீறியாம்!) 

இதில் ஓர் ஈனத்தனமான அரசியலோ அல்லது கீழ்த்தரமான ஒரு எண்ணமோ இருப்பது உங்களுக்குப் புலப்படுகிறதா??

”தொலைதூரக் கல்வி வழியே ஹிந்தி கற்றுக்கொள்ள தமிழகத்தில் ஆர்வம் கணிசமாக உயர்வு” : இந்தி இயக்குனரக தொலைதூரக் கல்வி மையம் தகவல்

என்று வந்திருக்க வேண்டிய செய்தித் தலைப்பு எப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்று பாருங்கள்... மற்றவை யாவும் தங்களின் சிந்தனைக்கே.....!

சரி... இப்பொழுது ஓர் ஆசுவாசத்துக்காக ஒரு சின்ன கேள்வி... இந்த வாரம் செய்திகளைப் பின் தொடர்ந்தவர்கள் இந்தப் புகைப்படக் கேள்விக்குப் பதில் தெரிந்த துரதிர்ஷ்டசாலிகளாக இருக்கலாம்!



இந்தப் புகைப்படத்தில் இருப்பவர் யார்??

இந்தப் பெண்ணின் புகைப்படம் கடந்த இரு நாட்களாக பெரும்பாலான ஆங்கிலப் பத்திரிக்கைகளில், தமிழ் நாளேடுகளில் வெளிவந்துள்ளது....

அனைத்து ஊடகங்களிலும் இவரது படம் அதுவும் ANI (Asian News International) மைக்கில் ஏதோ பேசிக்கொண்டிருக்கும் படம் என்றால் இவர் ஒரு புதிய சமூகப் போராளியாக இருப்பாரோ?! அல்லது ஏதேனும் புரட்சிகரமான வழக்குத் தொடுத்து சட்டப் போராட்டம் நடத்தியிருப்பாரோ? ஏதாவது துணிச்சலான கருத்து சொன்னவராகக் கூட இருக்கலாம் என்று யோசிக்கிறீர்களா.... மிகவும் சரிதான்..... செய்தித்தாள்களில் ஒருவரின் புகைப்படம் வெளிவருவது அவ்வளவு எளிதா என்ன? ஏதாவது ஒரு சாதனை செய்திருந்தால் தானே ஊடக வெளிச்சம் பொதுஜனம் மீது விழும்! இந்தப் பெண்மணி செய்த சாதனைதான் என்ன??

இந்த கிரேட் இண்டியன் லேடியின் பெயர் கஞ்சன் படேல்..... இவருக்குக் கடந்தவாரம் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்திருக்கின்றன அவைகளுக்கு அவர் “காரவி, சாஞ்சி, தாரவி” என்று பெயர் சூட்டியிருக்கிறார்!
ஓ..அப்படியா... மகிழ்ச்சி! சரி... இதில் என்ன சாதனை என்று கேட்கிறீர்களா? குழந்தைகளின் பெயர்களை நாம் கவனிக்கவேண்டுமாம்.....

Garvy, Saanji, Taravi - அதாவது GST!

இந்தக் கேடுகெட்ட அரசாங்கம் கொண்டுவந்த GST வரி இந்த அம்மையாரைக் கவர்ந்துவிட்டதாம் அதனால் தன் குலக் கொழுந்துகளுக்கு அதே முதலெழுத்துகளில் பெயர் சூட்டி மகிழ்ந்திருக்கிறாராம்.....

இந்தக் கருமத்துக்குத்தான் இத்தனைப் பெரிய அங்கீகாரம், சேனல்கள் முதல் செய்தித்தாள்கள் வரை அம்மையாருக்குப் புகைப்படத்துடன் கூடிய பதிவேற்றங்கள்! ஜிஎஸ்டி பற்றி இந்தப் பெண்ணுக்கு என்ன தெரியும்? எந்த விஷயத்தில் இவர் ஜிஎஸ்டி மீது இத்தனை ஈர்க்கப்பட்டார்? இவரின் கல்வித் தகுதி மற்றும் வணிகச் செய்திகளின் புரிந்துணர்வு எத்தகையது? போன்ற விஷயங்களை யாரோ ஒரு சாதாரண நிருபர் அலட்சியமாகக் கேள்வி கேட்டால் கூடத் தோலுறிக்கப் பட்டிருக்கும். ஆனால் அப்படியில்லாமல் போனது, இதுபோன்ற விளம்பர மோகம் மற்றும் அருவருப்பான மீடியா வியாபாரங்கள் எல்லாம் எப்படி நகர்கின்றன அல்லது மக்களை எப்படி நகர்த்துகின்றன என்பதற்கான அவல ஆதாரமாய்ப் பதிவு செய்யப்பட்டு இந்த அபார சாதனை சர்வதேச செய்தியாக உலக ஊடகங்களின் பார்வைக்குப் போயிருக்கிறது!

ஏன் பிரதர், நம்ம ஊரு உருப்படும்னு நினைக்கிறீங்க??!

 நன்றி!

பிரபு எம்.


Friday, December 18, 2015

இளையராஜாவின் கோபமும் தீபிகா படுகோனின் பப்பிஷேம் பேட்டியும்!



”ஆனாலும் இளையராஜா இப்படிக் கோபப் பட்டிருக்கக் கூடாது…. அந்தக் கேள்வியைப் பக்குவமாகக் கையாண்டிருக்கணும்” என்று இளையராஜாவுக்கு ஆளுக்கு ஆள் ஃப்ரீ அட்வைஸ் கொடுத்துக்கொண்டிருக்க……. தீபிகா படுகோனின் சமீபத்திய பத்திரிக்கைப் பேட்டி ஒன்று என் கண்ணில் பட்டுத்தொலைத்தது!



”டைம்ஸ் ஆஃப் இந்தியா” என்று ஒரு பத்திரிக்கை இருக்கிறதல்லவா… (அதை ஏன்  நீ படிக்குற??ன்னு கேட்கக்கூடாது பெங்களூரு டீக்கடையில் கண்ணில் பட்ட விஷயம் இது!) பல “பெருமை”களுக்குச் சொந்தமான அந்தப் பத்திரிக்கையில் அழகும் ஒய்யாரமுமாய் அரைமுதுகு காட்டிச் சிரிக்கும் தீபிகாவின் ஒரு ஆளுயுரப் புகைப்படம் அருகே மிகப்பெரிய எழுத்துகளில் சில வார்த்தைகள்…… 

“I can be Naked in front of Ranveer He wont hurt me!”

இதற்கு என்ன அர்த்தம்?? என்று இப்போதே ஒருமுறை அனைவரும் அவரவர் புரிதலுக்கு ஏற்ப மனதில் இந்த வார்த்தைகளை translate செய்துகொள்ளுங்கள! செய்வீர்களா?? செய்வீர்களா?? ச்ச்சீ….. ஸாரி பாஸ் க்ராஸ் டாக்….!! ஸோ மனதுக்குள் translate செய்து வைத்துக்கொள்ளுங்கள் சரியா! எனக்குத் தனிப்பட்ட முறையில் தீபிகாவின் அழகைவிட அவரின் சமுதாய எதிர்கொள்ளலும் அனாயச ஆங்கிலமும் பிடிக்குமாதலால் அந்த டீக்கடையில் மலையாள சேட்டன் அவரது டிரேட்மார்க்கான ஓர் அடிப்பொளி சாயாவைப் தயார் செய்து கொண்டிருக்கும் இடைவெளியில், அதே இதழில் தீபிகாவின் அந்த முழுப்பேட்டியையும் படித்தேன்.... படித்தால் உள்ளே பேட்டியில் ஒரு நான்கைந்து கேள்விகளுக்குப் பிறகான ஒரு கேள்விக்கு தலைப்பையொட்டிய பதில் இருந்தது..... இங்கே எப்படி இருக்கிறது என்று பாருங்கள்...... (ஸ்க்ரீன் ஷாட்டில் க்ளிக் செய்து பார்க்கவும்)

“I’m very sensitive It’s easy to hurt me………..bla bla bla………..… I CAN BE SO NAKED IN FRONT OF RANVEER HE WON’T HURT ME!”



ஹ்ம்ம்ம்…. இப்போது மெதுவாக ஒரு குட்டி ரீவைண்ட் செய்து இதற்கு முன்னால் செய்தித் தலைப்பில் கொடுத்திருந்த வாக்கியத்தையும் அதனை நீங்கள் மனதுக்குள் translate செய்ததையும் இங்கு உள்செய்தியில் இருக்கும் இந்த வாக்கியத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்! “SO” என்கிற இரண்டெழுத்து இடைச்சொல்லை மட்டும்  நீக்கிவிட்டு பத்துமடங்கு அதிகமான சைஸ் எழுத்தில் தலைப்பு கொடுத்து எப்படி கல்லா கட்ட அடிபோடுகிறார்கள் என்று புரிகிறதா?! 

ஹிஹி….இவ்ளோதான் பாஸ் விஷயம் இந்த மட்டமான, beep song-க்கு இணையான வக்கிரத்துடன் கூடிய வியாபாரத்தைத்தான் ரொம்பவே ஸ்டைலாக “Contemporary Journalism” என்று பீட்டர் விட்டுக்கொண்டிருக்கிறோம்….. இதைச் சொன்னால் 'இரண்டெழுத்தில் அர்த்தம் எப்படி மாறுகிறது பாருங்கள்!' என்று ஒருவருக்கொருவர் ஆங்கில வகுப்பு எடுக்கத் துவங்கிவிட்டார்கள் உடனிருந்த நண்பர்கள்…. டேய் டேய் உங்களையெல்லாம் ஆயிரம் பெரியார் ஓ ஸாரி இவனுங்க பீட்டர்ஸ்.... பெரியார் வேண்டாம் ஆயிரம் ஆபிரகாம் லிங்கன் வந்தாலும் திருத்த முடியாதுடா…..! என்று நினைத்துக்கொண்டே சேட்டனின் சாயாவை உறிஞ்சத் துவங்கினேன்…….!

இத்தோடு முடியவில்லை கச்சேரி….. நமது விகடனார் இருக்கிறாரல்லவா?? ஆனந்த விகடனார்…… அவரும் அந்த பப்பி ஷேம் பேட்டித் தலைப்பைப் படித்திருக்கிறார் போலும்…. என்ன கிறக்கமோ அவரும் முழுப்பேட்டியைப் படிக்கவில்லையா அல்லது படித்தும் புரியவில்லையா என்று எனக்குத் தெரியவில்லை இந்த வார விகடனில் என்ன வெளிவந்திருக்கிறது என்று அப்படியே காப்பி பேஸ்ட் செய்கிறேன் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்…..



அவர்முன்னால் நான் ஆடை இல்லாமல் இருந்தால்கூட என் மேல் உரிமை எடுத்துக்கொள்ளமாட்டாராம்!! டேய்…டேய்…. ஃபேஸ்புக் ட்விட்டர் மற்றும் சில ஆன்லைன் செய்திகளில் இருந்து செய்தி சேகரிக்கும் copy+paste journalism-னு ஒன்றைக் கண்டுபிடிச்சீங்க ரைட்டு இப்போ அதையும் உங்க வசதிக்கு ட்விஸ்ட் பண்ணி கமர்ஷியலா “அதுக்கும் மேல” போறீங்களேம்மா….. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா……!!

"NAKED" என்கிற ஒரு வார்த்தை கிடைத்தவுடனேயே.... அது என்ன ஏதென்று ஆராயாமல் வெறுமனே பச்சையாக நிர்வாணம் என்கிற ரீதியில் அர்த்தம் கொண்டு.....ஒரு பெண் அதுவும் நடிகை என்று ஓர் ஊடகனே இப்படித்  துடித்துக் களமிறங்கிவிட்டால்..... இயல்பிலேயே கீழ்த்தர ரசனையுடையவர்கள் ஏன் பீப் சாங்-களைப் பதிவேற்ற மாட்டார்களாம்??!

இப்படியெல்லாம் ஆயிரமாயிரம் தில்லாலங்கடி பேட்டிகளையும் ப்ரஸ்மீட்களையும் சாதாரணமாக செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இருப்பவர்களே மேற்கோள் காட்ட முடியும்…. நமது மீடியாவின் தரம் எந்தளவு தரைமட்டமானது என்பதை சிரமேற்கொண்டு விளக்கத் தேவையில்லை அது கண்ணாடி தேவைப்படாத கைப்புண் தான்…. ஆனால் புண்கள் புரையோடிப் புற்றுவைத்துவிட்டால் எதிர்ப்படும் ஆபத்துகளையும் நாம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்பதும் மறுப்பதற்கல்ல…..!



இப்போது இளையராஜா விஷயத்துக்கு வருவோம்……. ”அவன் நிருபர் அப்படித்தான் கேட்பான் இவரு ஏன் இப்படி டென்ஷன் ஆகுறாரு…. ஒரு பக்குவம் வேண்டாமா??” என்கிற ரீதியிலான அட்வைஸ் மழைகள் ஒருபுறம் இளையராஜாவை நோக்கிப் பொழிந்துகொண்டிருக்க…… இன்னொருப்புறம் அவரது ரசிகர்களும் தங்கள் தலைவனுக்காகத் தரம் தாழ்ந்தும் இறங்கியடிக்கத் தயாராக இருக்கும் இசைவிசிறிகள் அடிக்கும் கூத்துக்கள் அதைவிட மோசம்! இதுகுறித்து திரு. ஞானி அவர்களின் கீழ்க்கண்ட ஃபேஸ்புக் போஸ்ட் ஏற்புடையதாக இருந்தது!




எல்லாம் சரிதான்…… ஆனால் சென்னை மழை நிவாரணம் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில்தான் இளையராஜாவை நிருபர்கள் சந்தித்திருக்கிறார்கள் அதில் இப்படி ஒரு சர்ச்சையான ஃபுட்டேஜ் கிடைத்தவுடனேயே அவர்கள் கவரேஜ் செய்யப்போன விஷயத்தை அப்படியே சென்னை வெள்ளத்தில் விட்டுவிட்டு செம்பரம்பாக்கம் ஏரியில் பீப் சாங் சர்ச்சையைக் கலந்து விட்டார்களே இந்த மீடியா தர்மத்தை யாருமே கண்டுகொள்ளவில்லையே!!!

 நம்மல்லாம் நல்லா வருவோம் பாஸ்……

அன்புடன்,
பிரபு எம்.




Thursday, March 04, 2010

கதவுகளை உடைப்பவர்கள் கண்களையா மூடிக்கொள்ளப் போகிறார்கள்??



இதுபோன்ற விஷயங்களையெல்லாம் எழுதுவதா?? படிப்பது கூட தேவையற்ற காலவிரயம்தான்.....
எங்கே விடுகிறார்கள்.... "உடனடியாக சன் நியூஸ் பார்க்கவும்" என்று குறுஞ்செய்தி வந்தது...
இதற்கு முன்பு எனக்கு இப்படிக் குறுஞ்செய்தி வந்தது கலைஞர் கைதுண்ட போதும், செப்டம்பர் 11 ட்வின் டவர் இடிபட்டபோதும் தான்.... ஏதோ நடக்கிறதோ என்று டிவியை ஆன் செய்தேன்..... அந்த‌ கண்றாவிதான் அரங்கேறிக் கொண்டிருந்தது....

குறுஞ்செய்தி அனுப்பியவனுக்கு வேறு யாரோ சன் நியூஸ் பார்க்குமாறு செய்தி அனுப்ப, என்னவென்றே பாக்காமல் நண்பர்கள் அனைவருக்கும் ஃபார்வோடு செய்திருக்கிறான் இந்த சமூக சேவகன்... அவனைச் சொல்வதா அல்லது நாளொன்றுக்கு நூறு எஸ் எம் எஸ் இலவசமாகத் தரும் அலைபேசி சேவையைச் சொல்வதா??

ஓர் அந்தரங்க வீடியோ பதிவெடுக்கப் பட்டுள்ளது.. அது எதற்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கு அனுப்பப் பட வேண்டும்... காவல்துறையின் விலாசங்கள் மக்களுக்குத் தெரிவதில்லையா??( காவிகளுக்கு இருக்கும் நம்பகத்தன்மை கூட‌ காக்கிகளுக்கு இல்லாமல் போனதுதான் அவலங்களின் ஆரம்பமோ??) அந்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது... இன்னுமோர் ஆன்மிக வியாபாரியின் முகத்திரை கிழிந்துபோனது...... ஆராதித்த ஏமாளிக் கூட்டமே இன்று அவன் ஆசிரமத்தை அடித்து நொறுக்கியுள்ளது.... சரி... அவன் மேல் இதுவரை ஒரு வழக்கு பதிவாகி உள்ளதா? யார் வழக்கு பதிவு செய்வது? எந்த குற்றத்தின் அடிப்படையில்?? ஆக இரண்டு நாட்களாக, ஏதேதோ நடந்துகொண்டிருக்கிறது மீடியாவில், சட்டம் என்றும் நீதித்துறை என்றும் காவல்துறை என்றும் இருக்கிறவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்?? மீடியாவுக்கும் மக்களுக்கும் இடையே சட்டத்திற்கு இடம் என்றுதான் ஏதேனும் இருக்கிறதா??

அவன், அவனது துறவற நெறிகளை மீறியிருக்கிறான்....சரி.. கூடவே மாட்டிக்கொண்டுள்ள அவனைவிடப் பிரபலமான அவள்???? அவன் அடுத்த சிலகாலம் கழித்து சில வெள்ளைத்தோல் பக்தசிகாமணிகளுடன் அமெரிக்காவில் ஆசிரமம் ஆரம்பிப்பான்..... மீண்டும் இவள்????

"கதவைத் திற காற்று வரட்டும்" என்று ஆன்மிகத் தொடர் எழுதவிட்டு அவனை ஆராதித்த குமுதம் ஆளுக்கு முந்தி "சாமியாரின் முகத்திரை கிழிக்கும் எக்ஸ்க்ளூஸிவ் வீடியோ" என்று இமெயில் அனுப்புகிறது... இத்தனை நாள் அவன் எழுத்தைப் பதிவுசெய்து அவனுக்குப் பெரும் அந்தஸ்து கொடுத்ததற்கு அவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது?? யார் கொடுப்பது??

இந்த வெட்கங்கெட்ட சம்பவங்கள் நமக்குப் புதிதல்லவே அல்ல.... ஆனால் சமீபகாலமாகவே மீடியாவின் அத்துமீறல்கள் அடக்குமுறையின்றித் தொடர்ந்துகொண்டே இருக்குமானால் தணிக்கைக் குழு, நீதித்துறை இவையெல்லாம் எதற்கு இருக்கவேண்டும்?? இழுத்து மூடிவிடலாமே..... எதை ஒளிபரப்புவது.. எதை விடுப்பது என்று எந்த வரையரையுமே கிடையாதா நம் நாட்டில்??... புரியவில்லை...நாளைக்கு ஒரு கொலையையும் கற்பழிப்பையும்கூட வீடியோ கொடுத்தால் ஒளிபரப்புவார்களா??

இந்த ஒரு ஸ்காண்டல் எத்தனை முக்கியச் செய்திகளை கவனங்களிலிருந்து இருட்டடிப்பு செய்திருக்கிறது என்பதை ஒருமுறை யோசித்துப் பார்க்கவும்....

வீரப்பன் செத்துப்போனதோடு  " நக்கீரன்" தன் நெற்றிக்கண்களைக் கதவுகளின் சாவித்துவாரங்களில்தான் விடாது பொருத்திவைத்திருக்கிறான் கல்லா கட்டுவதற்காக....

ஜுவி, ரிப்போர்ட்டர்களைத் தொட்டு நாளாகிவிட்டது, விகட குமுதங்களின் மீதும் மரியாதை போய்விட்டது...   வேறெந்தவொரு வெகுஜன‌ பத்திரிக்கையையும் தொடவே  விருப்பமற்றுப் போய்...  மேலும் சினிமா.. டிவி எல்லாம் வெறுத்துப்போய்.... அடப்பாவிகளா... கடைசியில் நம்மள துறவி (உண்மையான துறவின்னு தான் அர்த்தம்... மாத்திப் புரிஞ்சிக்கப் போறீங்க‌!!) யாக்கிடுவானுங்க போலயே....

எங்கே செல்லும் இந்தப் பாதை.......


எனக்கு சமூகத்தில் விடை தெரியாத கேள்விகளைதான் இங்கே கேட்டிருக்கிறேன்.... வேறெங்கு கேட்பது நான், என் வலைப்பூவை விட்டால்??  இருப்பினும்  சுத்தம் சுகாதாரம் கருதி..... இதை நானே அழித்துவிடுவேன் விரைவில்.....

Thursday, December 10, 2009

அஜீத் & மீடியா


சென்றவார விகடனில் கவனித்த ஒரு பகுதி........ 

"பில்ட் அப் வேண்டாம்.: அஜீத் எச்சரிக்கை"  

சென்ற வாரத்துக்கான விகடனின் விளம்பரங்கள் அனைத்திலுமே இந்தக் கட்டுரை ஹைலைட் செய்யப் பட்டிருந்தது.... ரஜினியின் அட்டைப்படம் வேறு.....ஆக‌ இந்தவாரம் விகடன் செம சேல்ஸ்தான்.... என்று நினைத்துக் கொண்டு விகடனைத் திறந்தேன்....  

"என்ன... மறுபடியும் அஜீத் "எச்சரிக்கைகள்" விடுக்க ஆரம்பித்து விட்டாரா??"  

என எண்ணிதான் அந்தப் பேட்டியைப் படித்தேன்... படித்தபின் தலையில்தான் அடித்துக்கொள்ளத் தோணியது..... அது அஜீத்தின் பேட்டியே அல்ல!!! "அசல்" பட‌ இயக்குனர் சரணின் பேட்டி!!  

சரி அஜீத் ஏதேனும் "எச்சரிக்கை" விடுத்திருக்கிறார் என்று சரணாவது சொல்லியிருக்கிறாரா ?? என்று பார்த்தால் அதுவும் இல்லை....சரணையாவது தனிப்பட்ட முறையில் அஜீத் எச்சரித்திருக்கிறாரா என்றால் அப்படியும் இல்லை...... அட விடுங்க.... அஜீத் தன்னிடம் சொன்னதாக சரண் அந்தப் பேட்டியில் சொல்லியிருக்கும் அந்த வார்த்தைகளையே பாருங்க......  

// 'மக்கள்ல ஒருத்தனா என்னைக் காட்டுங்க. ப்ளீஸ்.... அநாவசியமான பில்ட் -அப் வேண்டாம்'னு என் தோள் மேல கை போட்டுச் சொன்னார் அஜீத்.//  

இது எப்படி பாஸ் "எச்சரிக்கை" ஆகும்??? பாவம் மனிதர் ஃப்ரண்ட்லியாக ஒரு வேண்டுகோள்தானே வைத்திருக்கிறார்....

பொதுவாகவே கவனித்திருக்கிறேன்........ சிலகாலம் முன்பு , எங்கெல்லாம் அஜீத்தின் பேட்டி வெளிவருகிறதோ.. அதற்குக் கீழ் எப்போதுமே "அஜீத் ஆவேசம்"...... "அஜீத் குமுறல்".... "உருமல்".... "எச்சரிக்கிறார் அஜீத்...... கொதிக்கிறார் அஜீத்" என்றெல்லாம் tags இருக்கும்..... அந்த பேட்டிகளையெல்லாம் படித்ததாக நினைவு இல்லை.......... ஆனால் ஒருமுறை சேனல் பேட்டி ஒன்றில் இது தொடர்பாக அவரிடமே ஒரு கேள்வி கேட்கப்பட்டது.... அதற்கு அவர்....  

" நானும் கவனித்திருக்கிறேன்... ஆனால் அந்தப் பேட்டிகளின் தலைப்புதான் அப்படிச் சொல்லும் அதையே உள்ளே வாசிச்சுப் பார்த்தீங்கன்னா.... அது ஒரு குமுறலாகவோ, எச்சரிக்கையாகவோ, ஆவேச உரையாகவோ இருக்காது.... நார்மலாதான் பேசியிருப்பேன்....சினிமா ஜர்னலிசத்துக்கு பரபரப்பு அவசியம் ஸோ நான் அவங்கள சொல்லி ஒண்ணும் இல்ல!!"

என்று ரொம்பவே பக்குவமாக, கேஷுவலாகச் சொன்னார் அஜீத்!! அவரின் அந்தப் பேச்சும் அணுகுமுறையும் என்னைக் கவர்ந்திருந்த‌ காரணத்தினால்தான் இந்த "எச்சரிக்கை"யைப் படித்ததும் பகிர்ந்துகொள்ள விழைந்தேன்...  

இந்தியக் கிரிக்கெட் அணியின் Assertive Captain (Sometimes Aggressive too!!) சவுரவ் கங்குலியின் கிரிக்கெட் கேரியரிலும் அவர் பேசியவற்றாலும், பேசியவ‌ற்றில் ரெண்டு மூன்று ஸ்பூன்கள் 'மிர்ச்சி' சேர்த்து மீடியாக்கள் ரிப்போர்ட் செய்ததாலுமே பல சிரமங்களுக்கு ஆளானார்.... சில சமயங்களில் அஜீத்திடமும், கஙகுலியிடமும் Personality ரீதியிலான சிற்சில ஒற்றுமைகளை அவ்வப்போது கவனித்திருக்கிறேன்...... ஆனால் கங்குலி மீடியாக்களிடம் often over exposed.... ஆனால் அஜீத்தோ அந்த விஷயத்தில் கொஞ்சம் ரிசர்வ்ட்தான்.... ஆனாலும் இருவருமே மீடியாக்களுக்கு எக்குத்தப்பாகத் தீணி போட்டவர்கள்!!

எது எப்படியோ... மீடியா என்னும் வார்த்தையின் அர்த்தம் "ஊடகம்".... "ஒலி"க்கு ஊடகம் காற்று... தாங்கிச் செல்ல காற்று எனும் "ஊடகம்" இருந்தால்தான் மலைமேல் நின்று கத்தினாலும் நம் ஒலி ஊருக்குக் கேட்கும்... பத்திரிக்கை, டி.வி போன்ற ஊடகங்கள் எல்லாம் காற்றைப் போலத்தான் செலிபரிட்டிகளுக்கு!! தான் தாங்கிவரும் செய்தி உண்மையா? பொய்யா? சாதகமா? பாதகமா? என்றெல்லாம் காற்றுக்குத் தெரியாது. (ஆனால் காற்று, தன்னிடம் சொன்னதை என்றும் திரித்து சொல்லாதுதான்!!!) கேட்கும் நம் காதுகள்தான் பகுத்துப் பார்க்க (பார்த்துத் தொலைய) வேண்டும்....  

அடுத்து "அஜீத் கர்ஜனை" என்று ஒரு பேட்டி வந்தாலும் நிச்சியம் வாங்கிப் படித்துப் பார்த்தால்தான் அது உண்மையான "கர்ஜனை"யா?? என்று தெரியும், அதுவும் அந்த பத்திரிக்கைக்கு லாபம்தான்!! ஆக எப்ப‌டி பாத்தாலும் அவர்கள் வியாபாரம் சக்சஸ்தான்.....!!  

ஆகமொத்தம் தமிழனுக்கு........ மெய்ப்பொருள் காண்பது "செலவு"!!
ஹ்ம்ம்ம்ம்.... என்னா வில்லத்தனம் :)  

(பிரபலங்களின் பேட்டிகளை விரும்பிப் படிப்பதும், Perrsonality Watching கிலும் ரொம்பவே ஈடுபாடு எனக்கு... அந்த வகையில் இந்த விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள எண்ணினேன்....)


அன்புடன்,