Monday, December 09, 2013

நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகளும் - "மோடி அலை"யும்!




"அலை" என்பது இந்திய அரசியலில், குறிப்பாக தேர்தல்களில், என்றுமே  மிக மிக வலிமையானதாகத்தான் இதுவரை அறியப்பட்டுள்ளது.... அதுஆளுங்கட்சிகள் மீதான எதிர்ப்பு அலையாக இருந்தாலும் சரி, தலைவர்களின் அகால மரணங்களினாலான‌ அனுதாப அலையானாலும் சரி.... இந்திய அரசியல் "அலைகள்" என்றுமே மொத்தத்தையும் வாரி சுருட்டித் தன்பக்கம் இழுத்துக்கொள்ளும் ராட்சச "சுனாமி"கள்தான்!

தற்போது நாட்டில் அதிகம் விவாதிக்கப்படும் "மோடி அலை"யையும், 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கான "செமி ஃபைனல்" என்று வர்ணிக்கப்பட்ட இந்த நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகளையும் ஒப்பிடும் ஒரு சிறிய அலசல்தான் இந்தப் பதிவு!

நான்கு மாநிலத் தேர்தல்  செமி ஃபைனலா???

இந்த நான்கு மாநிலத் தேர்தலை 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கான செமிஃபைனல் என்று வர்ணிப்பது பிஜேபியின் பிரச்சாரம்தான்! காரணம் இதில் அவர்களது கட்சியின் வெற்றி வாய்ப்புகள் வெகுவாக‌ ஓங்கியிருப்பதை அவர்கள் நன்று அறிந்திருந்தார்கள்! இந்த  4 -0 வெற்றியை நாடெங்கும் வீசும் மோடி அலையின் பிரதிபலிப்பாக அறிவிப்பதில் இன்று வெற்றிபெற்ற எந்த முதல்வரும் (வசுந்தரா ராஜே உட்பட) தயக்கம் காட்டாததை கவனிக்க வேண்டும்...... இந்த வெற்றியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முயறிசியில் பிஜேபி ஒருமித்த முயற்சி காட்டுவது நல்ல அரசியல் என்றாலும் அந்தக் கட்சியைப் பொறுத்தவரை இத்தகைய ஒருமித்த  நிலைப்பாடு ஓர் ஆச்சர்யமே! சரி... இந்த 4 மாநிலத் தேர்தலை நிஜமாகவே நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரையிறுதி ஆட்டமாகக் காணலாமா? என்றால்..... முதலில் அந்த நான்கு மாநிலத் தேர்தலின் பின்னணியை உற்று நோக்க வேண்டும்......



ராஜஸ்தான் -

          *  கடந்த ஐந்து ஆண்டுகளாக இங்கு நடந்துவந்த அஷோக் கெலாட் தலைமையிலான‌ காங்கிரஸ் ஆட்சி, இந்தப்
பொதுத்தேர்தலோடு ஆட்சிக் கட்டிலை காலி செய்யப்போகிறோம் என்பதைத் தெளிவாகத் உணர்ந்துகொள்ள‌ உளவுத்துறை ரிப்போர்ட் கூடத் தேவைப்படவில்லை அந்தளவுக்கு மக்களின் அதிருப்தியை சம்பாதித்து வைத்திருந்தார்கள் ராஜஸ்தானில்!

            * மறுபுறம் வசுந்தரா ராஜேவுக்கு ராஜஸ்தான் மக்கல் மற்றும் பிஜேபியின் தொண்டர்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு பொதுவாகவே மிகவும் வலிமையானதுதான், அதிலும் இந்தத் தேர்தலில் ஆட்சியை மீண்டும் வசுந்தராவிடம் ஒப்படைக்க மக்கள் காத்திருந்தார்கள் என்பது தெளிவான உண்மை!

            * இன்னுமொரு கவனிக்க வேண்டிய விஷயம்... கடந்த 1993 பொதுத் தேர்தலிலிருந்தே மக்களின் தீர்ப்பு ஒருமுறை பிஜேபி மறுமுறை காங்கிரஸ் என்னும் சுழற்சி அடிப்படையில்தான் அமைந்து வந்திருக்கின்றது! இது தமிழ்நாடு கேரள சட்டசபையுடன் நன்கு பொருந்திப்போகும் அணுகுமுறையாதலால் நம்மால் நன்கு புரிந்துகொள்ளமுடியும்!

மத்தியப் பிரதேசம்-

           * கடந்த 2005ல் இருந்து ஷிவ்ராஜ்சிங் சௌகான் தலைமையிலான பாஜக அரசுதான் இங்கு ஆட்சியில் இருந்து வருகின்றது... பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், மத்திய பிரதேச பாஜகவின் தலைவருமான ஷிவ்ராஜ்சிங் சௌகான்.... குஜராத்துக்கு எப்படி நரேந்திர மோடியோ அதேபோல மத்திய பிரதேசத்துக்கு பாஜகவின் ஆதர்ஷ நட்சத்திரம்!

           * மோடியின் ஏக பலமான‌ "ப்ராண்ட் குஜராத்" பிரச்சாரம் ஏகப்பட்ட சர்ச்சைகளுக்குட்பட்டது.... ஆனால் ஷிவ்ராஜ்சிங்கின் மத்தியப்பிரதேச நீண்ட ஆட்சியோ மக்களின் நிதர்சன ஆதரவுடன் கூடியது! இருப்பினும் ஷிவ்ராஜ்சிங்கின் "ப்ராண்ட்" தேசியப் பிரபலம் ஆகாததற்குக் காரணம் அவரைப் பிரபலப்படுத்துவதற்கான சர்ச்சைகள் எதுவும் பெரிய அளவில் இல்லாததுதான்!!..... இதையொட்டித்தான் சமீபத்தில் மோடியின் குஜராத்தை விட ஷிவ்ராஜ்சிங்கின் மத்தியப்பிரதேசத்தின் வளர்ச்சி முக்கியமானது என்கிற ரீதியில் அத்வானி குறிப்பிட்டிருந்தார் (அது மோடியின் தலைமை அவருக்கு ஏற்படுத்திய கசப்பினால் வந்த வாசகம் என்று விமர்சனத்துக்குள்ளானது வேறு விஷயம்!)

 டில்லி மற்றும் சட்டீஸ்கர் -

            ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் பாஜக வென்றிருப்பதில் பெரிய ஆச்சர்யம் இல்லை என்பதற்கு மேற்கூறிய புள்ளிகளே சான்று .... ஆனால் டில்லி மற்றும் சட்டீஸ்கரில் பாஜக வென்றிருப்பது அவர்களுக்கு தெம்பளிக்கக்கூடியதே..... இருப்பினும்...... இந்த 4-0 வெற்றி மேலே சொன்ன‌ "மோடியின் அலை" என்று பாஜகவினர் சொல்லுவார்களேயானால்...... வெற்றி வித்தியாசங்களைப் பார்க்கும்போது டெல்லி மற்றும் சட்டீஸ்கரின் "இழுபறி வெற்றி" அந்த ஏரியாக்களில் எந்த ஓர் அலையும் வீசியதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்றே உணர்த்துகின்றன!

இது காங்கிரஸ் மீதான கடும் வெறுப்பினால் இந்திய மக்களுக்கு வழக்கம்போல், இருக்கவே இருக்கும் ஒரே மாற்றான‌, பாஜக பக்கம் ஆதரவை அளித்துள்ளார்களே தவிர.... இதில் நரேந்திர மோடியின் "ப்ராண்ட்" எதிர்பார்த்ததைப்போல அபாரமாகவெல்லாம் வொர்க்-அவுட் ஆனதைப்போல் தெரியவில்லை.....



ஆம் ஆத்மியின் எழுச்சி:

இந்த நான்கு மாநிலத் தேர்தலில் தேசிய அளவில் நம்பிக்கை துளிர்க்கும் ஒரே விஷயம் அரவிந்த் கெஜ்ரிவாலின் "ஆம் ஆத்மி" கட்சியின் எழுச்சியே ஆகும்!

காங்கிரஸ் இல்லாவிட்டால் பிஜேபி என்கிற மாற்று வெறும் Substitutional தான்!
ஆனால் காங்கிரஸ் மீதான வெறுப்பில் பிஜேபி வாங்கிய 32 இடங்களைவிட ஒரு மாற்று அரசியல் வேண்டி ஜனங்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 29 இடங்கல் கொடுத்து ஆதரவு அலை எழுப்பியிருப்பதுதான் Real Alternative!

காங்கிரஸை ஊழலின் அடையாளமாகக் கைநீட்ட பாஜகவின் கைகள் ஒன்றும் கரைபடியாத கரங்கள் அல்ல! அதேபோல இந்த இரண்டு கட்சிகளையும் மீறி எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்ட எத்தனையோ பேருக்கும் மக்கள் உடனே ஆதரவு கொடுத்ததும் இல்லை! மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலின் "துடைப்பத்"தை நம்புகிறார்கள்....அந்த நம்பகத்தன்மை மகத்தானது! அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நடிகரோ அல்லது பணபலம் படைத்த வித்தகரோ அல்ல என்பதுதான் இங்கு கவனிக்கவேண்டிய விஷயம்!

நிருபர் ஒருவர் ஆம் ஆத்மி பிரமுகரிடம் கேட்கிறார்... "தற்போது 29 சீட்டுகளில் முன்னணியில் இருக்கும் உங்களுக்குக் காங்கிரஸ் ஆதரவு அளித்தால் ஆட்சியமைக்கலாம்..... ஏற்பீர்களா?!"  சற்றும் யோசிக்காமல் மறுமுனையிலிருந்து பதில் வருகிறது.. "இதே கேள்வியை பிஜேபியிடம் நீங்கள் கேட்பீர்களா?!!!" என்று!
 மேலும் அவர் , " எப்படி காங்கிரஸ் பிஜேபியை ஆதரிப்பது அபத்தமானதோ அதேபோல்தான் நாங்கள் காங்கிரஸ் ஆதரவைக் கோருவதும்!" எனத் தெள்ளத்தெளிவான பதிலைக் கேட்டபோது கிள்ளிப்பார்த்துக்கொண்டேன் அப்போதும் நான் இந்தியாவில்தான் இருந்தேன்.... ஆச்சர்யம்!!

ஆம் ஆத்மி கட்சியின் இந்தத் தேர்தல் எழுச்சியைவைத்துத் தனிப்பதிவு ஒன்று எழுதப் போவதால் இந்தப் பதிவில் இந்தப் பகுதியை இத்துடன் முடித்து முதன்மைப் பகுதிக்கு செல்கிறேன்............

இது மோடியின் அலையா?!

ஆக.....

               *  இந்த சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் மீதான முழுமையான வெறுப்பை மக்கள் உமிழ்ந்திருக்கிறார்கள் என்பது 100% ஊர்ஜிதமாகிறது!

              * காங்கிரஸ்ஸுக்கு எதிரான ஓட்டுக்கள் வழக்கம்போல் பிஜேபிக்கு விழுந்திருக்கின்றன காரணம் டெல்லியில் இருந்ததுபோல மாற்று அரசியலுக்கு (ஆம் ஆத்மி) மற்ற மாநிலங்களில் வாய்ப்பு இல்லை!

             * ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத் தேர்தல் முடிவுகளிலும் வசுந்தரா மற்றும் ஷிவ்ராஜ்சிங்கின் அபிமானமே பிரதான காரணிகளே தவிர நரேந்திர மோடியின் அஸ்திரம் அங்கு எவ்வளவு எடுபட்டது என்று யோசிக்கமுடியவில்லை.... என்னைப் பொறுத்தவரை இந்த இரண்டு மாநிலங்களுக்கும் மக்களை பிஜேபியின் பக்கம் கவர ஒரு நரேந்திர மோடி தேவைப்படவில்லை என்றுதான் உணரமுடிகிறது!

            *  இந்த சட்டசபைத் தேர்தலில் மக்கள் சட்டசபைக்குத்தான் வாக்களித்திருக்கிறார்கள்..... நாடாளுமன்றத் தேர்தலைப் பற்றி அவர்கள் பெரிதும் அலட்டிக்கொண்டிருப்பதாகத் தெரியவில்லை! ஆக இது "செமி ஃபைனல்" என்பதெல்லாம் அரசியல் கிச்சு கிச்சுதான்!

            *  மோடியின் மீது இருப்பது அபிமானம்தானன்றி இன்னும் அது ஓர் "அலை"யாக அடிக்கத்துவங்கவில்லை என்பதுதான் நிதர்சனம்!

இதனை பிஜேபி உணர்ந்து.... மக்கள் மனதில் மையம் கொண்டிருக்கும் இந்த அபிமானத்தையெல்லாம் வாக்குகளாக மாற்றக் கடுமையாக உழைத்தால் மட்டுமே பெரும்பான்மையான வெற்றி மோடிக்குக் கிடைக்குமே தவிர, மோடியின் முகத்தைக் காட்டியே வாக்குகளைக் கரந்துவிடலாம் என்று அவர்கள் நம்பினால் அதற்குச் சம அளவிலான ஏமாற்றமும் கிடைக்க வாய்ப்பிருப்பதையே இந்த நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகள் பறைசாற்றியிருக்கின்றன!

எனவே.......இது காங்கிரஸ் மீதான எதிர்ப்பு அலை...... இந்த அலையில் பிஜேபி கரைசேர்வது சுலபமாகத் தோன்றலாம்.... ஆனால் நிலைத்து நிற்கக் கடுமையான உழைப்பும் மக்களின் நம்பகத்தன்மையை இன்னும் பலமடங்கு அதிகப்படுத்துவதற்கான உத்வேகமும் கட்டாயம் வேண்டும் என்பதே நிஜமான நிலவரம்!

டெயில்பீஸ்:

நாடாளுமன்றத் தேர்தலில் மோடி வெற்றிபெற்றுவிட்டாலும்...... நல்ல ஆட்சி வழங்கி சொந்தமாகத் தனது அலையைக் கிளப்பினாலன்றி அடுத்த தேர்தல்களில் நிலைத்து நிற்க முடியாது..... காரணம்
ஆம் ஆத்மியைப் போன்று ஆக்கப்பூர்வமான மாற்றுக் காரணிகள் படைதிரண்டு நிற்கலாம் அவரது எதிர் அணியில்!

அப்போ காங்கிரஸ்???

நல்லது நடக்கட்டும்!


அன்புடன்,
பிரபு எம்

Saturday, November 02, 2013

ஆரம்பம் [U] (2013)



மேக் இட் ஸிம்பிள்!.... இதுதான் "ஆரம்பம்" அஜித் படத்தில்  வில்லன்களுக்கு அடிக்கடி கொடுக்கும் கூல் அட்வைஸ்!

அதையேதான் அல்டிமேட் ஸ்டார் விஷ்ணுவர்தனுக்கும்  சொல்லியிருக்கிறார் போல அவர் "ஆரம்பம்" கதையெழுதுவதற்கு முன்! .....அதே  அட்வைஸ் படம் பார்க்கும் நமக்கும் நன்றாக  பொருந்தும்! So... Let's also KEEP IT SIMPLE! :-)

ஸ்டைல், ரிச்னஸ், ஃப்ரெஷ்னஸ் இதெல்லாம் இல்லாம அஜித் படமா?..... இதெல்லாம் இருந்தாலே அந்த ஏரியா பக்கம் லாஜிக், ரியாலிட்டி எல்லாம் இருக்க முடியுமா?!! இந்த புரிதலுடன்தான் இந்தப் பதிவே ஆரம்பம்! ;-)

குண்டு வைப்பதற்கு தீவிரவாதிகளுக்கும்..... குண்டுவெடிப்பு சீன் வைக்க இந்திய சினிமாவுக்கும் மும்பையைத் தவிர வேறு இடம் இல்லாத காரணத்தினால் இந்தப் படமும் மும்பையில்தான் ஆரம்பிக்கிறது.......! ஆனால் அந்த பாம்களையெல்லாம் வைத்துவிட்டு ஸ்டைலாக நடந்துவந்து போலீசுக்கு இன்னும் இருபது நிமிஷத்துல குண்டுவெடிக்கப்போகுது என்று இன்ஃபர்மேஷன் சொல்வது யார் தெரியுமா?? ... அதான் சொல்லிட்டேனே " நடந்து வந்து"ன்னு.... அப்புறம் என்ன சஸ்பென்ஸ்......யெஸ்.... சாட்சாத் நம்ம தலதான்!!!! பாம் ஸ்க்வாடாலேயே டிஃப்யூஸ் பண்ண முடியாத இன்டெலிஜெண்ட் பாம் என்பதால் பொதுமக்களை மட்டும் காப்பாற்றிவிட்டு பாம் வெடிப்பதை வேடிக்கை பார்க்கிறார்கள்........... !

அடுத்த ஸீனில்........ உலகத்தின் எந்தவொரு நெட்வொர்க்கையுமே ஜஸ்ட் தனது லேப்டாப் கீ-போர்டில் தடதடவென எதையோ தட்டி 'ஹேக்' செய்துவிடும் ஓர் இன்னொசண்ட் ஹேக்கர் பாய் அறிமுகாகிறார் அவர்தான் ஆர்யா!

இத்தனை மூளைக்கார ஆர்யாவை அஜித் அப்படியே அலேக்காக அபேஸ் செய்கிறார் அவர் காதலி டாப்ஸியைப் பகடையாக்கி! தன்னுடைய‌ ஸ்டைலிஷ், வில்லனிக், ரிவெஞ்ச் எபிஸோடுக்கு ஆர்யாவின் ஹேக்கிங் மூளையை ஃப்ரீயாக ரெக்ர்யூட் செய்து  தன் அடுத்தடுத்த நகர்வுகளால்  தேசத்தையே உலுக்குகிறார் அஜித்...... இந்த ஆபரேஷனில் அஜீத்துக்கு ஒரே ஒரு போல்ட் அன்டு ப்யூட்டிஃபுல் அஸிஸ்டெண்ட் நயன்தாரா! அஜீத் யார்? நயன் தாரா யார்? அஜீத் எதற்காக "ஃப்ளாஷ் நியூஸ்" சேனல் அதிபரைக் குறிவைக்கிறார்? எதற்காகக் கொலைகள் செய்கிறார்? இந்தியாவின் ஹோம் மினிஸ்டருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்??  என்று சஸ்பென்சுடன் உண்மையிலேயே விருவிருவெனப் போகிறது முதல்பாதி..... இன்டெர்வெலின் ஆக்ஷன் ப்ளாக் ஒரு மினி க்ளைமேக்ஸ்! இன்டெர்வெல் வரைக்கும் படம் செம இண்டரெஸ்டிங்ங்ங்!!!

அதான் ஃபர்ஸ்ட் ஹாஃப் முடிஞ்சிடுச்சே..... இப்போ ஒரு ஃப்ளாஷ்பேக் வெச்சு எல்லாத்துக்கும் ஒரு காரணம் சொல்லுவாங்கன்னுதான் பாப்-கார்ன் கவரை வெடிச்சிட்டு ஸீட்டுக்குத் திரும்புகிறோம்..... ஃப்ளாஷ்பேக்கில் தெலுங்கின் யங் ஸ்டார் ராணா வருகிறார்.....! அஜித்தும் ராணாவும் மும்பை ஆண்டி-டெரரிஸ்ட் ஃபோர்ஸின் இன்டெலிஜெண்ட் ஆஃபீஸர்ஸ்......... இருவரும் உயிர் நண்பர்கள்! அப்புறம்தான் நமக்கே தெரியுமே...... ஒரு ஆபரேஷனில் ராணா உயிரிழக்கிறார்....... புல்லட் ப்ரூஃப் அணிந்தும் புல்லட்டுகள் துளைத்து ராணா இறந்திருக்க...... புல்லட் ப்ரூஃப் அப்ரூவலில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது! அதை நியாயப்படி அஜீத்தாலும்,  ராணாவின் தங்கை நயன் தாராவாலும் எதுவுமே செய்யமுடியாமல் போகத்தான் இந்த மெகா ரிவெஞ்ச் ஆரம்பம்!!

அதன்பிறகு படத்தில்...... ஸ்விஸ் பேங்க், துபாய் பேங்க் அக்கௌண்ட்டுகள் எல்லாம் ஹேக் ஆகும்..... மும்பை போலீசிடம் அரெஸ்ட்டாகித் தப்பித்த அஜித் அடுத்த ஸீனில் துபாய் ஏர்-போர்ட்டில் அடுத்த ப்ளான் போட்டுக்கொண்டிருப்பார்...... ஹை-ப்ரொஃபைல் கார்கள், டுகாடி பைக், ஸ்பீட் போட் என்று பறப்பார்..... ஹோம் மினிஸ்டரைத் தூக்குவார்...... நாமும் பார்த்துக்கொண்டே இருக்கும் டெம்போவில் ஒருமாதிரி நல்லாத்தான் இருக்கும் என்று வைத்துக்கொள்ளலாம்! :))

ஸிம்பிளாக சொன்னால்..... துபாய்ல வெச்சு டுகாட்டி பைக் தல கிட்ட எப்படி கிடைச்சுச்சு?ன்னு யோசிச்சா உங்களுக்கு உங்க 200 ரூபாய் வேஸ்ட்.... அதே.... "தல என்னமா பைக் ஓட்டுறாரு!!" ன்னு சிலாகிச்சா... இந்த தீபாவளி "தல" தீபாவளிதான்!!!! ......

அஜித், நயன், ஆர்யா, கிஷோர், அதுல் குல்கர்னி, மஞ்ச்ரேக்கர்,  யுவன், விஷ்ணு வர்தன் என்று பெரிய பெரிய பெயர்கள் இருந்தாலும் மேன் ஆஃப் தி மேட்ச் அவார்டை சற்றும் யோசிக்காமல் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷுக்குக் கொடுத்துவிடலாம்...... இத்தனை அட்வான்ஸ்மென்ட்களுக்குப் பிறகும் இத்தனை ஃப்ரெஷ்ஷாக  அயல்நாட்டு அழகை அள்ளிக் கொடுத்திருப்பது ஓசியில் ஓர் ஆன்ஸைட் ட்ரிப் கிடைத்ததுபோல் இருக்கும்! அழகியல் படம்தான் இது...... கலை இயக்கம், காஸ்ட்யூம் டிசைனிங், ஒளிப்பதிவாளர், இயக்குனர் அனைவரும் அணுக்கமாக செதுக்கியிருக்கிறார்கள் படத்தின் அழகியலை!

அஜித்தை அணுஅணுவாக ரசித்து உடை வழங்கி மீண்டுமொருமுறை அசத்தியிருக்கிறார் அனு வர்தன்!  நூறு படம் முடித்துவிட்ட யுவனுக்கு  படத்தின் வியாபாரத் தேவைகளையும் ரசிகனின் அப்ளாஸ் தருணங்களையும் கரெக்டாக மேட்ச் செய்து இசையமைக்கத் தெரியாதா என்ன?! கரெண்ட் ட்ரெண்டின் "Passing Cloud" நம்பர்களால் தன் பங்கை முடித்திருக்கிறார்!

ஆர்யாவுக்குத்தான் படத்தில் Dramatic Priority அதிகம்..... அந்த "குண்டுப்பையன்" கான்செப்ட் செம இளமை புதுமை! அதையும் மீறி அஜித் அடித்து விளையாடுவதுதான் அல்டிமேட்! அஜித்..... சிம்ப்ளி சூப்பர்ப்ப்ப்ப்ப்......

நயன் முகத்தில் தெரியும் முதிர்ச்சி நடிப்பிலும் தெரியும்போது என்ன பிரச்னை!...... அஜித்தோட சேர்ந்து வரும்போது நயன் இன்னும் அழகாகத் தெரிவது நேச்சுரல் ப்யூட்டி!.... அஜித்- நயன் இடையே "காதல்" இல்லாதது மெச்சூரிட்டி...... தேங்க்யூ டைரக்டர் சார்.......

டாப்ஸி..... ஸாரி...... பாப்பாவுக்கு நியூஸ் வாசிக்கவே தெரியல அப்புறம் நடிக்கிறதப் பத்தியெல்லாம் பேசலாம்......

ஆர்யா அவர் ஏரியாவில் செமையாக‌ ஸ்கோர் செய்கிறார்....... அதுல் குல்கர்னி, மகேஷ் மஞ்ச்ரேக்கர் எல்லாம் பெரிய ஆளுங்க.... பாவம் இந்த இந்த காஸ்ட்லி மீலில் அவர்களெல்லாம் ஊறுகாய்கள்தான்....... கிஷோர்... வழக்கம்போல ஷார்ப் ஆனால் "ஆரம்பத்"திற்குப் புதிதாக எதுவுமே தரவில்லை....... "ஹரிதாஸ்" கிஷோர் இந்தப் பகுதியை நடித்துக்கொடுத்திருப்பதுபோலத்தான் இருந்தது!

பஞ்ச் டயலாக் ஹீரோக்கள் எல்லாம் ஹிட் கொடுக்கத் திணறும் இந்த "விஜய சேதுபதி" ட்ரெண்டில் ஒரு ஸ்டார் வேல்யூ மூவி என்று மீண்டும் முதலிலிருந்து தொடங்கும் "ஆரம்பம்" இது என்று சொல்லலாம் ஆனால் இருந்தும் படத்தின் ரிசல்ட் வேற மாதிரி வந்தால் தமிழ் சினிமா ஆடியன்ஸ் மாறியிருக்கிறார்கள் என்று ஊர்ஜிதமாகிவிடும்!! பார்ப்போம......

என்ன ஒண்ணூ..... ஒரு சேஞ்சுக்கு அஜித் அவர் கால்ஷீட் வாங்குவதற்கு முன்னால் எழுதப்பட்ட ஒரு கதையில் நடித்தால் அழகான அந்த "நடிகனின்" ரசிகன் இன்னும் குதூகலிப்பான்! மற்றபடி ஆல் இஸ் வெல்!

ஆரம்பம் - டேக் இட் ஈஸி!! :-)


அன்புடன்
பிரபு எம்

Saturday, August 17, 2013

ஐந்து ஐந்து ஐந்து [U/A] (2013)



தொடர்ந்து ஐந்துக்கு ஐந்து நட்சத்திரங்களையும் பெறுகின்ற திரைக்கதைகளாகத் தேர்ந்து இயக்கும் சசி, இந்தமுறை ஏனோ ஐந்துக்கு மூன்று போதுமென்று த்ரீ ஸ்டார்ஸை மட்டும் குறிவைத்துத் (!) தூக்கியிருக்கிறார்!  தனது வழக்கமான மெல்லின சினிமாவைத் தாண்டி இம்முறை வல்லினத்தில் கதை பிடித்திருந்தாலும் யரல"வளவள"ல திரைக்கதையால் படம் இடையினமாகப் போனதுதான் வருத்தம்!

பேரலல் (Parallel)  திரைக்கதையில் சாக்லேட் பாயாக பரத், புதுமுகம் மிருத்திகாவை காதலிக்கும் சுவாரஸ்ய அத்தியாயங்கள் ஒருபுறமிருக்க மற்றொருபுறம் ஆக்ரோஷ பரத் இன்வெஸ்டிகேட் செய்வது தான் காதலித்தது நிஜமா? தன் காதலி உண்மையா அல்லது கற்பனையா? என்று! பரத்தைப் பரிசோதிக்கும் டாக்டரும் பரத்தின் அண்ணன் சந்தானமும் லியானா(மிருத்திகா) என்று ஒரு பெண்ணே நிஜமில்லை என்று சத்தியம் செய்யத் தன்னைக் காதலித்து ஒரு விபத்தில் இறந்துபோன பெண்ணே நிஜமல்லையோ என்று துடிக்கிறார் பரத்........ ஒருகட்டத்தில் பரத் தன்னைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள போலி சதுக்கங்களையெல்லாம் கண்டறிய, அவற்றை உடைத்தெறியும் முயற்சியில் ஒருவழியாக சைக்கோபாத் வில்லனைக் கண்டுபிடிக்கிறார் அதன்பிறகு குழப்ப‌ முடிச்சுகள் எல்லாம் ஒன்றொன்றாக அவிழ இறுதியில் எய்ட் பேக் இரும்பு உடம்புடன் பரத் தடைகளைத் தகர்த்து காதலியை மீட்கும் ஆக்ஷன் காம்போதான் எதற்கிந்த பெயர் என்று இறுதிவரை விளங்காத "ஐந்து ஐந்து ஐந்து"!

வித்தியாசமான கதையில் விஷயம் முழுக்கத் தெரிந்த கதாபாத்திரங்கள் திரைமறைவில் இருந்து ஆட்டுவிக்க முக்கியப் பாத்திரம் உண்மைகளைத் தெரிந்துகொள்ளத் துடிப்பதாக அமைந்திருக்கும் திரைக்கதையில் எதுவுமே புரியாமல் படம் பார்க்கும் ஆடியன்ஸால் சஸ்பென்ஸை பரத்துக்கு முன்னாடியே யூகித்துவிடமுடிவது மட்டுமே குறை திரைக்கதை தரமாகப் பின்னப்பட்டிருந்தாலும்!

பரத்.... ஒரே படத்தில் பல பரிமாணங்கள் காட்ட ஸ்கோப் இருக்கும் படு வெயிட்டான பாத்திரம்! மொத்தப் படத்தின் கணத்தையும் தன் வலிமையான தோள்களால் சுமந்திருக்கிறார் நிறைவாக! தன்னைச் சுற்றிலும் பொய்யாகப் பின்னப்பட்டிருக்கும் மாயவலையில் சிக்குண்டு தவிக்கும் காட்சிகளிலும், தன்னிடம் "பவர்" இருக்கின்றது என்று மிருத்திகாவுடனான இன்னொசன்ட் லவ் எபிஸோடிலும் பரத்தின் உடல்மொழி கச்சிதம்! வாய்ஸ் மாடுலேஷனில் மட்டும் இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம்! எய்ட் பேக் பாடிபில்டிங் எல்லாம் படத்தின் மார்க்கெட்டிங்குக்கும் பரத்தின் ஃப்யூச்சரிக்கும்தான் உதவியிருக்கிறதே தவிர படத்துக்கு எதற்கு என்பது கேள்விக்குறியே! எப்படிப்பார்த்தாலும் பரத்துக்கு இந்தப் படம் ஒரு பவர் பேக்ட் ஒன் மேன் ஷோ!

மிருத்திகா..... குழந்தைத்தனம் கண்களில் இன்னும் மிச்சமிருக்கும் குட்டி அழகி! குறும்பு கொப்பளிக்கும் கண்கள் விழித்துக்கொள்ளும்போதெல்லாம் உற்சாகமும் சேர்ந்து தொற்றிக்கொள்கிறது! நைஸ் கேர்ள்!

சுதேஷ் பெர்ரி... வித்தியாச வில்லன்.... கண்களை மறைத்துக்கொண்டு உடலாலும் தமிழ் தடுமாறும் பேச்சாலும் வயலன்ஸ் காட்டும் சைக்கோ வில்லன்.....  க்ளீன் பெர்ஃபார்மென்ஸ்

சந்தானம் இந்தப் படத்தில் சந்தானமாக மிகச்சொற்பமான காட்சிகளில்தான் காமெடியனாக‌ சிரிக்கவைக்கிறார்.... மற்றபடி அவருக்கு இதில் சப்போர்ட்டிங் ரோல்தான் அதிகம்!

சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவில் வேகமும் வீரியமும் இன்னும் கொஞ்சம் கைகூடியிருந்தால் திரைக்கதைக்கு அழுத்தமும் கொஞ்சம் கைகோர்த்திருக்குமோ என்று ஓர் உணர்வு எழுந்தது! உதாரணத்துக்கு சமீபத்தில் வந்த சிங்கம்-2 வின் ஒளிப்பதிவைச் சொல்லலாம் பரபர ஆக்ஷன் ஸ்க்ரிப்டுக்காக ஸ்பெஷலாக மெனக்கிட்டுருக்கும் கேமரா அபாயகரமான கோணங்களிலெல்லாம் அதகளமாகப் பயணித்து வேகமான திரைக்கதையை மொமண்டம் குறையாமல் ஸ்க்ரீனில் உட்காரவைத்திருந்தது! ஆனால்  இந்தப் படத்தில் அதுபோன்ற எந்தவொரு சாகசமும் செய்யவிலை சரவணன் அபிமன்யுவின் கேமரா ரொம்பவே சாத்வீகமாகமான ஒளிப்பதிவு!

சுபாரக்கின் எடிட்டிங்கைப் பாராட்டித்தான் ஆகவேண்டும்...... அத்தனைத் துல்லியமான படத்தொகுப்பு....
விபத்துக்காட்சிக்கு முன்னும் பின்னுமாக இன்ஸ்டால்மென்டில் கதைசொல்லும் திரைக்கதையைக் கொஞ்சமும் குழப்பமின்றி காட்சிகளால் கோர்த்துக்கொடுத்த நேர்த்தி க்ளாஸ்!

சைமனின் இசை ஜஸ்ட் பாஸ் ரகம்! பின்னணி இசை இன்னும் கொஞ்சம் மிரட்டியிருக்கலாம் இருந்தாலும் சமகால ஆக்ஷன் படங்களைப்போல் இரைச்சல்களால் நிரப்பிவைக்காமல் விட்டது நல்ல ஆறுதல்!

சசியின் திரைக்கதை எழுதும் திறனைப் பற்றித் தனியாகச் சொல்ல ஏதுமில்லை.... தமிழின் மிகத்தேர்ந்த கதைசொல்லிகளில் சசியும் ஒருவர் என்பது நிதர்சனம் இருப்பினும் தனக்குப் புதிதான களத்தில் கால்பதித்திருக்கும் சசி இந்தப் படத்தில் சற்று தடுமாறியிருப்பதுபோல் தெரிவதற்கு படத்தின் தாமதமான ரிலீஸும் ஒரு முக்கியக் காரணம்!
மற்றபடி இயக்கமெல்லாம் அருமைதான்! முதலிலேயே சொன்னதுபோல சசியின் ஃபைவ்ஸ்டார் படைப்பு இதுவல்லதான்! எனினும் தன்னால் ஒரு முழுநீள ஆக்ஷன் த்ரில்லரை வழங்க முடியுமென நிரூபித்திருப்பதில் வெற்றிகண்டிருக்கிறார் என்று நிச்சியம் சொல்லமுடியும்..... என்னதான் இருந்தாலும் "a Sasi Film" இதுவல்ல! :-(

ஐந்து ஐந்து ஐந்து -->  ஐந்துக்கு ஐந்து அல்ல!

அன்புடன்,
பிரபு எம்

Sunday, August 04, 2013

திண்ணைப் பேச்சு - 1 (04 - 08 - 2013)



"பாரதிபுரம்" ஏரியாவில் பல மாதங்களாகப் பூட்டியிருந்தப் பழைய வீட்டில் தன்னுடைய ரிட்டையர்மெண்ட் வாழ்க்கையை ரீவைண்ட் எஃபெக்டில் வாழ எண்ணித் தன் மனைவி கற்பகத்தம்மாளுடன் சமீபத்தில்தான் குடியேறினார் மயில்வாகனம்! மாலை வேளையில் வெவ்வேறு சேனல்களின் பல்வேறு சீரியல்களின் ஒலிகேட்கும் பாரதிபுரம் பிரதான சாலையில் இத்தனை ஆண்டுகளில் சுற்றியுள்ள வீடுகளெல்லாம் அடுக்குமாடிகளாக மாறியிருக்க  மயில்வாகனத்தின் வீடு மட்டும் பழைய ஸ்டைலில் இருபுறமும் அகலமான முற்றமும், தூண்களும் பின்வாசலில் துளசிமாடமுமாக பழமையின் அழகுடன் அமைந்திருந்தது!

காலப்போக்கில் விட்டுப்போன உறவுகளெல்லாம் தற்போது அவர் வீட்டுத் திண்ணையில்கூடி ஃப்ளாஷ்பேக்குகளையும், நாட்டு நடப்புகளையும் அசைபோடுவதுதான் அந்த ஏரியாவின் தற்போதைய ஃபுல்டைம் பொழுதுபோக்கு.....  அரசியல், சினிமா, கிரிக்கெட் எனத் துவங்கி அகிலத்தையும் ரவுண்டடிக்கும் திண்ணைப்பேச்சை ஒவ்வொரு வாரமும் ஒட்டுக்கேட்கலாம் இங்கே!

                                  ================== *****  ==============

மாலை வானத்தில் மழையானது அரசியலுக்கு வரப்போன பழைய‌ ரஜினிமாதிரி "வரப்போறேன்.... வரப்போறேன்...."னு போக்குக்காட்டிக்கொண்டே இருக்க பாரதிபுரத்தின் ஜுனியர் கிரிக்கெட் டீம் ரப்பர் பால் கல்லி கிரிக்கெட்டை "டக்வொர்த் - லீவிஸ்" முறைப்படி பத்து ஓவர் போட்டியை ஐந்து ஓவராகக் குறைத்து வேகப்படுத்துக்கொண்டிருந்தார்கள்...... மயில்வாகனத்தின் வீட்டுத் திண்ணையில்  அவரும் அவரது நண்பரான "நெகடிவ்" நெடுமாறனும் அமர்ந்திருந்தார்கள்!

பத்துஓவரில் 70 ரன்கள் எடுக்கவேண்டிய டார்கெட் இப்போது ஐந்து ஓவரில் 35ஆகக் குறைக்கப்பட்டிருக்க ஒவ்வொரு பந்திலும் டென்ஷன் எகிறிக்கொண்டிருக்கின்றது....... வேகமான விருவிரு  போட்டியில் ஒரு ரன்-அவுட்டில் வந்தது பஞ்சாயத்து......

"ஏய் நீ அவுட்டுடா..... நீ அங்ங்ங்ங்க வந்துட்டு இருக்கும்போதே நான் ஸ்டம்ப் த்ரோ பண்ணிட்டேன்" என்று பவுலிங் டீம் கேப்டன் பாலு வாதாட பேட்ஸ்மேன் முருகனோ அலட்டிக்கொள்ளாமல் " நான் அவுட் இல்லை ரீச் ஆகிட்டேன்" என்று பேட்டை முதுகுக்குப் பின்னாடி பிடித்துவைத்துக்கொண்டு பிடிவாதம் பிடித்தான்....... பொறுக்காத மழை அடித்துஊற்ற ஆரம்பிக்க.......... அத்தனை கிரிக்கெட்டர்களும் அடித்துப்பிடித்து ஒதுங்க இடம்பிடித்தது நமது திண்ணையில்தான்!

"பசங்களா..... பாத்துடா..... எல்லாருக்கும் இடம் இருக்கு மெதுவா உள்ள வந்திடுங்க" என்று பாந்தமாக வரவேற்று இடம் கொடுக்கும் மயில்வாகனத்தை சற்று கோணலான முகபாவத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் "நெகடிவ்" நெடுமாறன்!

"என்ன பசங்களா! ஜிம்பாப்வேயை நம்மாளுங்க வெளுத்துவாங்கிடாங்க போல!" என பசங்களை நோக்கி மயில் தனது பேச்சை ஆரம்பிக்க......

"ஆமா..... ஒரு சப்பையான் டீம் கிடைச்சுட்டா போதுமே இவனுங்களுக்கு வீரத்தக் காட்ட!" என்று பசங்களுக்கு முந்திக்கொண்டு கிரிக்கெட் டாபிக்கை பொசுக் கென்று நசுக்கினார் நெடுமாறன்!

" ஜிம்பாப்வே சப்ப டீமா இருந்தாலும் நம்ம டீம்லயும் தோணி, அஷ்வினெல்லாம் இல்லதான....... கோலி கேப்டன்ஸில இன்-எக்ஸ்பீரியன்ஸ்டு இந்தியன் டீம் தான அனுப்பினோம்........ அதுவும் அவங்க பிட்சுலயே போய் அவங்கள அடிச்சது பெரிய விஷயம்தான் அங்கிள்!" பசங்க ஸைடிலிருந்து வந்தது பதில்

பசங்களுக்கு சப்போர்ட்டாக மயில்வாகனம் , "அதான...... ஐ.பி.எல் ல பெங்களூர் கேப்டனா இருந்தப்ப இதோ இப்ப நீங்க ஒரு ரன்-அவுட்டுக்கு அடிச்சுக்கிட்டீங்களே அதுமாதிரிதான் காம்பிர்கூட போய் சண்ட போட்டுட்டு இருந்தான் இந்த கோஹ்லிப்பய...... இவன் தேற மாட்டான்னு நெனச்சுட்டு இருந்தேன்..... ஆனா இன்னிக்கு கப் வாங்குன அப்புறம் தோணிகிட்ட நான் பாத்து கத்துக்கிட்ட ஸ்ட்ராடெஜியைத் தான் பயன்படுத்தினேன் இந்தத் தொடரில்னு பக்குவமா பேசினது எனக்கும் பிடிச்சுதான் இருந்திச்சு! ஆனாலும் இந்த ஸீரீஸில் இந்தியாவோட பலத்தைவிட ஜிம்பாப்வேயோட பலவீனம்தான் பெருசு!" என்று மயில்வாகனம் பேலன்ஸ் பண்ணிப் பேசியதில் பசங்களுக்கும் உடன்பாடு தெரிந்தது!

"அட..... என்னப்பா.... எல்லா டீம்லயும் ஸ்ட்ராங்கா ரெண்டு பவுலர் வெச்சிருக்கான் இங்க ஒரு ஃபாஸ்ட் பவுலரைக் காட்டு பாப்போம்!.... இப்பவும் ஸ்பின்னர் அமித் மிஷ்ராதான விக்கெட் எடுத்திருக்கான்....... ஏதோ ஒரு தமிழ்நாட்டுக்காரன் கொஞ்ச நாளா டீம்ல ஸ்பின்னரா அசத்திட்டு இருந்தான் இப்போ அதுக்கும் ஆப்பு வெச்சுருவானுங்க...... இந்த அமித் மிஷ்ராவ உள்ள விட்டுட்டு அஷ்வினத்தான் தூக்கப்போறானுங்க டீமைவிட்டு....... நம்ம ஊருக்காரன் ஒருத்தன் வந்திடக்கூடாதே இந்த சப்பாத்தி துன்னுறவனுங்களுக்கு!" கோபமாக ட்ராக் மாறினார் நெடுமாறன்......

"பிசிசிஐ விவகாரத்தை வெச்சு சொல்லுறியா நெடுமாறா?!" என்று மயில்வாகனம் கொக்கி போட.......

"ஆமாம்பா...... தமிழ்நாட்டுக்காரன் எவன் வந்து சேர்ல உக்காந்தாலும் இந்த ஜெக்மோகன் டால்மியாவுக்கு என்னதான் செய்யுமோன்னு தெரியாது..... அது ஏசி முத்தையாவா இருந்தாலும் சரி..... இந்த  இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீ நிவாசனா இருந்தாலும் சரி..... எதையாவது செஞ்சு மூக்கை நுழைச்சிடுறானே! மேட்ச் ஃபிக்ஸிங் யாருதான் பண்ணல! சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெயிச்சா மட்டும் ஃபிக்ஸிங்காம் என்னமோ மத்தவனெல்லாம் உத்தமன் மாதிரி!" என நெடுமாறன் பாயிண்டுகளை அடுக்க.........

"அதெல்லாம் சரிதான் ஆனா பிசிசிஐ பாட்டுக்கு அவங்க இஷ்டத்துக்கு ஒரு ரிட்டையர்டு ஜட்ஜை வெச்சு விசாரணை நடத்தினாங்களாம்.... ராஜஸ்தான் ராயல்ஸ் குந்த்ராவும் சரி சி.எஸ்.கே குருநாத்தும் சூதாடவே இல்லைன்னு ஒரு அறிக்கைய விட்டுட்டுப் பிரச்னைய முடிக்க முயற்சி பண்ணதும் ஓவர்தானே!" நெடுமாறனை மயில்வாகனம் லாஜிக்காக மடக்கி சூடேற்ற........... மழை கொஞ்சம் குறையத்தொடங்கியது.....

"சரி....... பழைய சூதாட்டப் பிரச்னையை முறைப்படி டெல்லிபோலீஸும், கோர்ட்டு நியமிச்ச டீமும்தான் விசாரணை பண்ணினாங்க..... என்ன ஆச்சு?!!! கடைசில பாவம் செத்துப்போன ஹான்ஸி குரோனி மட்டும்தான் கெட்டவராம் நம்ம அசாருதீன் ஃபிக்ஸிங்குல ஈடுபட்டதுக்கு எந்த ஆதாரமும் இல்லையாம்! குரோனிகூட சேர்ந்து மாட்டுன கிப்ஸு சிப்ஸுயெல்லாம் கூட நல்ல பசங்கதான்னு ரிஸல்டு வந்திருக்கு! இதுக்கு என்ன பண்ணுறதுன்னு சொல்லு!" தன்பக்க வாதத்துக்கு நெடுமாறன் வலுசேர்க்க........ மழைவிட்டஜோரில் பசங்க மீண்டும் விளையாடத் தெருவில் குதித்தோடினார்கள்....... ஆஃபீஸ் வேலை முடிந்து வந்து  சற்றே நனைந்தவராகத் திண்ணையில் வந்து இணைந்தார் எல்.ஐ.சியில் வேலைபார்க்கும் கதிர்வேலன்!

"மேட்டூர் டாம் இன்னும் ரெண்டு நாள்ல நெறையப் போகுதாம்....... பாசனத்துக்கும் நேத்தே தண்ணி தெறந்துவிட்டாங்க போல..... மழையின்னும் விட்டபாடில்லயேப்பா!" என்றவாறே வந்தமர்ந்தார் கதிர்வேலன்.....

"ஏன் மழைதான் பெய்ஞ்சுட்டுப் போகட்டுமே! பூமி குளிர்ந்தா நல்லதுதானே...... இந்த வருஷம் அப்போ கர்நாடகா கூட காவிரிச் சண்ட இருக்காதுன்னு சொல்லு......." என மயில் சொன்னதுதான் தாமதம்......

"அதான் கேரளாக்காரன் சண்டைபோட முறுக்கிக்கிட்டு நிக்குறானே முல்லைப் பெரியாறுல! இதுலயும் தமிழந்தான் இளிச்ச வாயன்! தமிழ்நாட்டுக்கு முல்லைப் பெரியாறுல இருந்த உரிமையெல்லாம் முடிஞ்சுபோச்சாம் ஹைகோர்ட்டுல சொல்லியிருக்கானுங்களாம்....... அடுத்த நாளே சுப்ரீம் கோர்ட் கமிஷன் கேட்டாங்களே...... ஏன் உரிமையில்லன்னு! வாயடுச்சுப் போயிருக்கானுங்க இப்போ கேரளாகாரனுங்க!" மழை டாபிக்கிலும் வெயிலேற்றினார் நெடுமாறன்.......!

"இந்த நதிகளையெல்லாம் இணைக்கணும்னு எல்லாம் பேசிக்கிட்டு இருந்தாங்களே........ என்ன ஆச்சு அந்த பேச்செல்லாம்?" கதிர்வேலனைப் பாத்து மயில்வாகனம் கேட்க......

"மாநிலத்தையெல்லம் பிரிக்கிற மூடுல கவர்ன்மென்ட் இருக்குது நீ இப்ப வந்து நதியையெல்லாம் இணைக்கச் சொல்லிட்டு இருக்குற...!!" டைமிங்கில் ஸ்கோரடித்துவிட்ட சந்தோஷம் கதிர்வேலனுக்கு.......

"பரவாயில்லப்பா எத்தனையோ போராட்டதுக்கு அப்புறம் தனித் தெலுங்கானா கிடைச்சிருச்சே அந்த மக்களுக்கு....... 60 களிலிருந்தே உறுதியா போராடிப் பெற்றிருக்குற வெற்றி இது அந்த மக்களுக்கு! சுமூகமா முடிஞ்சா சரிதான்!" மயில்வாகனம் சொல்ல......

" நிலம் வாரியா பிரிக்காம மொழிவாரியா மாநிலங்களப் பிரிக்கணும்னு நேரு அரசு எப்போதோ காட்டின பிடிவாதம் இன்னிக்கு வரைக்கும் எவ்வளவோ ரத்தம் பாத்துதான் அடங்குற நிலைமைக்கு வந்திருக்குது!" என ஆமோதித்தார் கதிர்வேலன்.......

"இன்னும் பிரச்னையெல்லாம் தீரல....... தெலுங்கானா உருவாகிட்டா தெலுங்குதேசம் சந்திரபாபு நாயுடுவுக்குக் கணிசமான பின்னடைவு ஏற்படும்னு இப்பவே உலுக்க ஆரம்பிச்சிடிச்சு அரசியல் வட்டாரம்..... சுத்திமுத்தி ஒய் எஸ் ஆர் பையனுக்குக் கொஞ்சம் லாபமாவும் அமையுமாம் இந்த தெலுங்கான பிளவு! எல்லாம் அரசியல்தான்யா...... மக்களுக்கு ஒரு நல்லதும் நடக்காதுதான்!" இது வழக்கமான நெடுமாறன் ஸ்டேட்மென்ட்........

"ஒரு புது மாநிலம் பிறக்கப்போகுதுபா கிட்டத்தட்ட ஒரு சுதந்திரப் போராட்டமே நடந்திருக்கு! நல்லதோ கெட்டதோ பொறுத்திருந்துதான் பார்ப்போமே!" என மயில்வாகனம் பாஸிடிவ்வாக முடிக்க முயற்சித்தாலும்......

"அதுக்குள்ள ஆளாளுக்குக் கெளம்பிட்டாய்ங்கய்யா எங்க ஸ்டேட்டையும் பிரிக்கணும்னு!" எனத் தொடர்ந்தார் நெடுமாறன்!

"ஆமாமா...... ஜம்முவையும் காஷ்மீரையும் பிரிக்கணுமாம்...... மாயாவதிக்கு உத்திரப் பிரதேசத்தை நாலா பிரிக்கணுமாம்........ ஏன் தமிழ்நாட்டைக்கூட காவிரி நதியை மையமா வெச்சு ரெண்டா பிரிக்கணும்னு கூட ஒரு அப்பாடக்கரு காமெடி அறிக்கை விட்டிருக்காறாம்!" என்று டேட்டா கொடுக்க ஆரம்பித்தார் கதிர்வேலன்......

"தமிழ் சினிமால தான் இந்த "ட்ரெண்டு" ப்ரச்னை பாடா படுத்துதுன்னா நம்ம நாட்டு அரசியலும் இப்படித்தான்யா இருக்குது..... டெல்லில ஒரு ரேப் நடந்தது பரபரப்பா ஆச்சுன்னா உடனே ஊரெல்லாம் நடக்குற அத்தன ரேப் கேஸும் திடீர்னு லைம்லைட்டுக்கு வர்றதும்.......... பீகார்ல சத்துணவு சாப்பிட்டு பிள்ளைங்க மயங்கி விழுந்ததுல இருந்து இப்ப தினம் தமிழ்நாட்டுல ஒரு நியூஸ் வருது மதிய உணவு சாப்பிட்ட குழந்தை மயக்கம்னு! ஒரு மாநிலத்த நாப்பது வருஷப் பிரச்னைகளுக்கு அப்புறம் பிரிச்சா அதே ட்ரெண்டுல எல்லா மாநிலத்தையும் பிரிக்கக் கேக்குறாங்க! என்ன ட்ரெண்டு மாறினாலும் மாறாத ரெண்டே விஷயம் நம்ம பி.எம் மோட மௌனமும் இங்க நம்ம சி.எம் மோட கொடநாடு விசிட்டும்தான்யா!" நீளமாகப் பேசி மயில்வாகனம் ஒருவழியாக அரசியல் டாபிக்கை முடித்துவைக்க.........

"என்னங்க......... மகளோட காதலுக்கு எதிரானவன் இல்லன்னு சேரன் விளக்கம் கொடுத்திருக்காருங்க" என்று கற்பகத்தம்மாளின் குரல் கேட்டது வீட்டுக்குள் சன் நீயூஸ் சானல் ஒலியுடன் சேர்ந்து!

" இவரு மட்டும் படத்துல  பத்மப்ரியாவையும், லத்திக்காவையும் உருகி உருகிக் காதலிப்பாராம்..... வாழ்க்கைல ஹீரோவா இல்லாம தன் பொண்ணுக்கு அப்பாவா ஆகும்போது மட்டும் இவரு படத்துல வர்ற ஹீரோயின் அப்பா கேரக்டர் மாதிரியே இவரும்  மாறிடுவாராம்...... அதுசரி அந்த கேரக்டரை உருவாக்குனதும் அவருதான!!" தனக்கே உரிய கோணத்தில் நெகடிவ் கமெண்ட் அடித்தார் நெகடிவ் நெடுமாறன்!

"யோவ் அதுக்காக..... பெத்த புள்ளய விட்டுட முடியுமாய்யா! இதென்னய்யா பேச்சாயிருக்கு........ நான் கூடத்தான் அம்பிகாபதி - அமராவதி காதல்கதையை காதல் ரசம் சொட்ட பசங்களுக்குப் பிடிக்குறமாதிரி காலேஜ்ல பாடம் எடுத்திருக்கேன் அதுக்காக என் வீட்டுல எவனையோ ஒருத்தன எம்பொண்ணு விரும்புறேன்னு வந்து நின்னா எப்படியோ போன்னு விட்டுட முடியுமா!" ரிட்டையர்டு டீச்சராகக் களம்குதித்தார் மயில்வாகனம் சேரனுக்கு ஆதரவாக!

"சரி நெடுமாறா உன்னைய மாதிரிதான் ஊர்முழுக்க பேசுறானுங்க இந்த விவகாரம் வந்ததிலிருந்து...... உன் பாயிண்டையே எடுத்துக்குவோம்....... சினிமால சேரனோட‌ காதலை ஹீரோயின் சைடுல இருந்து எதிர்க்குற மாதிரி காட்டுறப்போ காதலிக்குறவன் நல்லவனா? கெட்டவனான்னு படம் பாக்குற எனக்கும் ஒனக்கும் தெரியும்........... அதுனால சேர்த்துவைக்காம வறட்டுப்பிடிவாதம் பிடிக்குற பொண்ணோட அப்பன் கெட்டவனா தெரியுறான்...... இங்க நெஜத்துல அந்தப் பொண்ணையும் நமக்குத் தெரியாது அவ லவ் பண்ணுற பையன் யாருன்னும் நமக்குத் தெரியாது.... இந்த விஷயத்துல திடீர்னு குதிச்சு ஒரு அப்பனா தவிச்சுட்டு இருக்குற சேரனுக்கு டஃப் கொடுக்க நம்ம யாருய்யா! பாவம்... சொந்த விஷயத்துக்கு சம்பந்தமேயில்லாம பொதுமக்களுக்கு விளக்கம் கொடுத்துட்டு இருக்காரு அவரு!"
தரைவரைக்கும் இறங்கி வாதாடினார் கதிர்வேலன்......

"உனக்கு யாருய்யா எல்.ஐ.சியில வேலை கொடுத்தது...... பேசாம நீ லாயரா போயிருக்கலாம்ல...." என்று சிச்சுவேஷனைக் கூலாக்க மயில்வாகனம் கமெண்ட் அடிக்க......

"இல்ல இல்ல உனக்கு லா பாயிண்ட விட சென்டிமெண்ட்டுதான்  நல்லா வருது........ சீரியலுக்கு வசனம் எழுதப் போயிடு உனக்குப் பிரகாசமான எதிர்காலம் இருக்குய்யா!" என கவுண்டர் கொடுத்தது எதிர்க்கட்சி நெடுமாறன்!

சீரீயல்னு சொன்னதும்தான் ஞாபகம் வருது...... எம் பொண்டாட்டி இப்போ சீரியல்ல உக்காந்தான்னா ராத்திரி வரைக்கும் அவள அசைக்க முடியாது நாம்போயி மாவு வாங்கிட்டு வந்து தோசை ஊத்துறேன்......... ஒத்தாசைக்கு வர்றீங்களாய்யா?! என்று மயில்வாகனம் கேட்க........ அப்பீட்டானார்கள் நெடுமாறனும், கதிர்வேலனும்!

                                 ============= **** ===================

Friday, July 19, 2013

கவிஞர் வாலி - நீங்காத நினைவுகள்





வயோதிகத்தால் இறுதிவரை வென்றெடுக்க முடிந்திராத‌ "வாலி"பத்தைக் காத்திருந்து முடித்தழைத்துச் சென்றிருக்கின்றது மரணம்!

"எழுதப் படிக்கத் தெரியாத
எத்துணையோ பேர்களுள் -
எமனும் ஒருவன்......

அழகிய கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான் !"

இவை.... கவியரசர் கண்ணதாசனின் மரணத்தைப் பற்றி அன்னாரின் இரங்கல் கூட்டத்தில் "கண்ணதாசனே.... என் அன்பு நேசனே...!" என இன்று மரித்துவிட்ட கவிஞர் வாலி பாடிய இரங்கல் கவிதையின் கடைசி வரிகள்!

ஆனால்.... வாலியின் மரணத்தில் என்னால் எமனை எழுதப் படிக்கத் தெரியாதவனாகப் பார்க்கமுடியவில்லை....... ஆயிரமாயிரம் அற்புதக் கற்பனைகளை சுத்த ரத்தம் பாய்ச்சி செழிப்பாய் வளர்த்தெடுத்த அந்த இதயம் தன்னியக்கம் மங்கிய நிலையில்  இத்தனை நாளாய்த் துவண்டிருந்த நிலை காணப்பொறுக்காதுதான் எமன்  இந்த அற்புதக் கவிதையைப் பொத்திவைத்துப் படித்துமகிழத்தான் கசங்காமல் அள்ளிச்சென்றிக்கிறான் என்று நினைக்கிறேன்!

காலமானது மறைந்திருந்து தாக்கிய முதுமை அம்புகளால் சற்றும் சரிந்துவிடாத‌ இந்த நவீன‌ வாலி..... மரண சுயம்வரத்தில் வாழ்க்கை வில்லை வீரமாய் வளைத்து வென்றுகாட்டியதில் என்றும் இராமன்தான்!

"மீசையில்லா பாரதி நீ.... தாடியில்லா தாகூர் நீ!" என்று கண்ணதாசனைப் பாடிய கவிஞர் வாலி முன்பொரு தொலைக்காட்சிக் கவியரங்கில் பாரதியைப் பற்றி " முண்டாசு கட்டிய பட்டாசு...... செருப்பணிந்து நடந்த நெருப்பு....... லட்சுமி ஈன்றெடுத்த சரஸ்வதி......... திருவல்லிக்கேணி யானை தின்ற கரும்பு......" என்று பாடித் துதித்த வரிகள் போல இத்தனை எளிமையாய் பாரதியாரை எவரும் உணர்த்திப் பாடியதில்லை என்பேன்!

ஒரு இசை மேடையில் ஏ ஆர் ரஹ்மானைப் பற்றி........"ஹாலிவுட்..... பாலவுட்...... கோலிவுட் என மூன்றுவுட்டுகளையும் தன் இசையால் கொள்ளையடித்திடும் ரஹ்மான் ஒரு ராபின்ஹுட்!" என்று தடால் டைமிங்கில் வார்த்தை முத்துக்களைச் சிதறிவிட்டுச் சென்ற கம்பீரம் இன்றும் கண்களைவிட்டு அகலமறுக்கிறது!

பின்பொரு விழாவில் இயக்குனர் சிகரம் பாலசந்தரைப் பற்றி ஒரே வரியில் சட் டெனச் சொன்னார்..... "ரஜினி - கமல்.... இருவரும் கே.பி ஈன்றெடுத்த பேபீஸ்" என்று!

கே பாலச்சந்தரின் இயக்கத்தில் அனாயசமாக நடித்துக் கலக்கிய நடிகர் வாலியின் ரசிகன் நான்! தமிழ்த் தொலைக்காட்சிகளில் வந்த ஓர் அருமையான தொடரான "கையளவு மன்சு"வில் துருப்புச் சீட்டாகக் கதை முழுதும் பயணிக்கும் குறும்பும் அதே சமயம் அழுத்தமுமான பாத்திரம் கவிஞர் வாலிக்கு....... ஒரு முழுநேர நடிகருக்குக் கூட அத்தனை இயல்பாக அந்தப் பாத்திரத்தை நடித்துக் கொடுத்திருப்பது எளிதானதாக இருந்திருக்காது ஆனால் அந்தத் தொடர் முழுக்க வாழ்ந்திருந்தார் வாலி! இன்றும் ஞாபகம் இருக்கிறது வாலி வரும் எபிஸோடுகளை மட்டுமே வைத்த கண் வாங்காமல் பார்ப்பேன் அந்த நாட்களில்!

அமரர் சுஜாதா தன் மாணவப் பருவத்தில் ஸ்ரீரங்கத்தில்  நடத்திய கையெழுத்துப் பத்திரிக்கையின் பிரதான கார்ட்டூனிஸ்டாக இருந்தவர் கவிஞர் வாலிதானாம்! அப்போது கார்ட்டூனில் கோலொச்சிய மாலி போல் வரவேண்டும் என்று ஒரு தோழன் பரிந்துரைத்த பெயர்தான் "வாலி" என்றுகூட எங்கோ எதிலோ எப்போதோ படித்த ஞாபகம்!

எம் எஸ் வி, இளையராஜா, அண்ணா, கருணாநிதி,எம் ஜி ஆர், பாலசந்தர், ரஜினி கமல் எனப் பலரைப் பற்றியும்  தன் எண்ணத்தில் எழுச்சிபெற்ற ஏற்றமிகு நினைவுகளையெல்லாம் மிக இயல்பாக " நினைவு நாடாக்கள் ஒரு ரீவைண்ட்" எனத் தொகுத்து எழுதிவந்தார்......

இறுதிவரை நடுக்கமடையாத கரங்கள் பேனா பிடித்து எழுதிய தீராத கவிதைகள் வாலிபக் கவிஞரின் பெயரை வானளாவ எதிரொலித்துக் கொண்டுதானிருக்குமென்றாலும் இனிவரப்போகும் இசைத் தலைமுறைகள் இமைக்கும் நேரத்தில் இசைக்குப் பாட்டெழுதித்தரும் இந்த இஷ்ட தேவனின் இழப்பை ஈடுசெய்யத் தவித்துத்தான் கிடக்கும் இனிவரும் காலமெல்லாம்........

ஓய்ந்துவிட்ட உடல் அஞ்சலிக்காக அசைவின்றி உறங்கிக்கொண்டிருக்க ...... அந்த இளமை உள்ளமோ இசையோடு இணைந்த தன் பாடல்கள் பயணிக்கும் அதே காற்றில்தான் கரைந்திருக்கின்றது..... வாலிபக் கவிஞரின் உற்சாகத் தரிசனங்கள் என்றும் நமக்கு இலவசமே அவர் கலந்திருக்கும் காற்றோடு இசையாய்.... இசையோடு கவியாய்!

கவியை வணங்கி.....

பிரபு எம்

Thursday, February 07, 2013

டேவிட் [U/A] (2013)






ஒரு பெயர்.... இரண்டு வாழ்க்கை.......

அதாவது இரண்டு டேவிட்!!

இதே படம் ஹிந்தியில்..... ஒரு பெயர்.... மூன்று வாழ்க்கை......

அதாவது மூன்று டேவிட்!!!

நான் ஸ்கூல்ல படிக்கும்போது எங்க க்ளாஸ்ல மொத்தம் நாலு பிரபு இருந்தோம்.....

அதாவது..... ஒரு பெயர்....... நான்கு வாழ்க்கை.....!!!! (அதுல ஒருத்தன் பேரு டேவிட் பிரபு!! ஹிஹிஹிஹி)

என்னதாண்டா சொல்ல வர்றன்னு எரிச்சலா கேக்குறீங்களா.......! அதான் அதான் அதேதான்.....! அதையேதான் எனக்கும் கேட்கணும் பிஜாய் நம்பியார்கிட்ட!!!! :-))))

"பாஸ்.... என்னதான் சொல்ல வர்றீங்க????????????????!!!!!!!!!!!!!!!"

ஜீவா பேரும் டேவிட்........  விக்ரம் பேரும் டேவிட்! ஜீவாவோட எபிஸோட் 1999ல மும்பைல நடக்குது......
விக்ரமோட எபிஸோட் 2010ல் கோவாவில் நடக்குது.......

ரெண்டும் சேர்த்து 2013 என்னாத்துக்கு தமிழ்நாட்டுல‌ வந்து எழவு கொட்டுதுன்னுதான் புரியல....!!!

வெல்.....

1999-ல் மும்பையில் ஒரு கட்சிப் பொதுக்கூட்டத்தில் ரோஹிணி ஹட்டங்காடி பெருங்கூட்டத்துக்கு முன்பாக மைக்கில் பேசிக்கொண்டிருக்கும்போது கூட்டத்திலிருந்து ஜீவா முன்வரிசையை நோக்கி வருகிறார்....... கையில் கத்தியுடன்!!! நமக்கு ஒண்ணுமே புரியமாட்டேங்குது....... ஏன்...........?? ஏன்னா அதான் ஃபர்ஸ்ட் சீன்!

2010-ல் கோவாவில் ஒரு கல்யாணம் நடக்குது.... விக்ரம் மாப்பிள்ளைத் தோழனா நிக்குறாரு...... மணக்கோலத்துல இருக்குற பொண்ணுகிட்ட ஏதோ வில்லங்கமா பேசப் பாக்குறாரு..... அதுவும் நமக்கு எதுவுமே புரியாது..... ஏன்னா அதுவும் விக்ரம் எபிஸோட்ல முதல் சீன்!

அப்புறம் ஒரே பேருடைய இந்த ரெண்டு வாழ்க்கையிலும் ரெண்டு ஃப்ளாஷ்பேக் ரெண்டு மணி நேரம் ஓடும்........

அதுக்கப்புறமா................

1999-ல் மும்பையில் ஒரு கட்சிப் பொதுக்கூட்டத்..... ரேஹிணி ஹட்ட...... பெருங்கூட்டத்....... மைக்கி..... பேசிக்.......போது  ஜீவா முன்வரிசையை நோக்கி வருகிறார் கையில் கத்தியுடன்!!!

2010-ல் கோவாவில் ஒரு..... கல்யா........விக்ரம்..... மாப்பி.......த்தோழ...... நிக்குறா.... மணக்கோ.... இருக்குற பொண்ணுகிட்ட ஏதோ வில்லங்கமா பேசப் பாக்குறாரு......!!!"

அதாவது...... அதே சீன் ரெண்டு மணி நேரம் கழிச்சு வருது.......ங்கொய்ய்யால..........அப்பவும் நமக்கு ஒரு எழவும் புரியலைன்னா என்னதாங்க பண்ணுறது!!!! :-)))

சரி.... அப்புறம் என்ன நடக்குதுன்னு கேக்குறீங்களா?! ஜீவா ரோஹிணி ஹட்டங்காடியைக் கொல்லுறமுன்னாடியே அவருக்குத் தெரிந்த இன்னொருத்தன் அவங்கள சுட்டுத்தள்ளிடுவான்...... விக்ரம் லவ் பண்ண அந்தப்பொண்ணை நிச்சியம் பண்ணபடி அவர் நண்பன்தான் கல்யாணம் பண்ணிக்கிறான்!

குழப்பமா இருக்கா.... நீங்க குழம்பக்கூடாது ஏன்னா...... படம் சொல்லுற மெசேஜ்.... "வாழ்க்கைல வலியத் தாங்குறவன்தான் டேவிட்!"

அந்த‌வகையில் பார்த்தா படம் பாக்குற எல்லாருமே "டேவிட்"தான்!!!! :-))
என்கூட தியேட்டர்ல ஒரு 57 "டேவிட்"கள் படம் பாத்தாங்க......
ஸோ..... ஒரு பெயர்..... 57 வாழ்க்கை!!! :-))))

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜோக்ஸ் அபார்ட்.....

வித்தியாசமான முயற்சின்னு சொல்லலாம்! ஹ்ம்ம்ம் சொல்லித்தான் ஆகணும்.....

ஜீவா எபிஸோட்....... சீஸனல் எஃபெக்டாக.....ஒரு கிறிஸ்தவக் குடும்பப் பின்னணியில் மும்பையில் நிகழ்கிறது.....
கல்லா கட்டுவதில் விருப்பமில்லாத நேர்மையான  ஃபாதர் நோயலாக நாசர் (ஆக்சுவலி பாஸ்டர் என்றுதான் அழைக்கவேண்டும்!) ஒரு சாதாரண பொலிடிகல் கேமுக்காக சம்பந்தமே இல்லாமல் ஃபாதர் நோயல் மிகக் கொடூரமானமுறையில் பப்ளிக்காக‌ அவமானப் படுத்தப்படுகிறார்... ஜீவாவால் எதுவுமே செய்யமுடியாமல் போகிறது...... நாசரின் மனநிலை இதனால் பாதிக்கப்படுவதால் ஜீவா ரொம்பவே டிஸ்டர்ப் ஆகிறார்..... நாசர் ஷேவ் செய்யும்போது முகத்தில் ஆர்ப்பாட்டக்கும்பல்தன் முகத்தில் கரிபூசி அவமானப் படுத்திய காட்சியை நினைத்து ரேசரால் முகத்தைக் கிழித்துக்கொள்ளும் காட்சி நிஜமாகவே மிக அழுத்தமானது! நாசர் நடிப்பு அபாரம்!...... ஜீவா நியாயம் கேட்கக் கிளம்புகிறார்.... அடிவாங்குகிறார்... அடிக்கவும் செய்கிறார்...... எல்லாம் எதார்த்தமாக நகர்வது பெரிய ஆறுதல்!
ஜீவா நியாயம்கேட்டுத் தட்டும் ஒவ்வொரு கதவும் ஏற்கெனவே திறக்காத கதவுகள் என்று சின்னவயதில் இருந்து சினிமா பார்ப்பவர்கள் அத்தனைபேருக்குமே தெரியும்! இருந்தாலும் காட்சிகளின் யதார்த்தம் பலமே!
நம்மைக் கொடுமைப்படுத்தாமல் மெல்லியதொரு அனுபவம் கொடுக்கும் காட்சித்தொகுப்பு ஜீவாவின் எபிஸோட்!

ஒருபக்கம் ஜீவாவின் கதை படு க்விக்காக டேக்-ஆஃப் எடுத்து சீரியஸாகக் கிளம்பிவிட...... மறுபுறம் கோவாவில் சீயான் விக்ரம் எந்த லட்சியமும் இல்லாத ஒரு லைட்டான கதையமைப்பில் குடி..குடி...குடி யென்று குடித்துத்தள்ளுகிறார்..... "குடிப்பழக்கம் உடல்நலத்திற்குக் கேடு" என்னும் வார்னிங் வாக்கியம் ஏதோ சேனல் லோகோ போல ஸ்க்ரீனின் ஓர் ஓரத்தில் நிரந்தரமாக இடம்பிடித்துவிடுகின்றது விக்ரம் எபிசோட் முழுக்க!!  திருமணம் முடிவான  மணநாளன்று விக்ரமின் மணப்பெண் தன் பாய்ஃப்ரெண்டுடன் ஓடிப்போய்விட அந்த விரக்தியின் வலியில் உழலும் கேரக்டர் விக்ரமுக்கு! அவரது ஒரே தோழி மசாஜ் பார்லர் வைத்திருக்கும் தபு.... "என் கல்யாணம் நின்னுபோனப்போ  ஊரே என்னப் பாத்து சிரிச்சப்ப நீ மட்டும்தான் எனக்காக அழுத..!!" என்று தபுவைப் பார்த்து போதையில் விக்ரம் எமோஷன் கொட்டும்போது.... "உன் கல்யாணப்பொண்ணு ஓடிப்போகும்போது என் நகைய எல்லாம் தூக்கிட்டுப் போயிட்டா அத நெனச்சுதான் நான் அழுதேன்னு உன்கிட்ட நிறைய தடவ சொல்லிட்டேன் டேவிட்!!!"னு அசால்டாகச் சொல்லுவார் தபு......... :-)) இப்படித்தான் முழுக்கதையும் நகரும்! நடுவே நண்பனுக்கு நிச்சியக்கப்பட்ட ஓர் அழகான அர்ச்சனாவ ("மொழி" ஜோதிகா பேரு!! புரிஞ்சிக்கோங்க!) விக்ரம் லவ் பண்ண ஆரம்பிப்பார்..... அவளும் தன்னை விரும்புறா என்று சைகை மொழிக் குழப்பத்திலும், 24/7 போதையிலும் விக்ரம் தானும் நம்பி தபுவையும் நம்ப வைப்பது சுவாரஸ்யம்...... கடைசியில் விக்ரமின் நண்பனுக்குத்தான் கிடைப்பாள் அந்த மௌன தேவதை!!!

இரண்டு கொஞ்சம்கூட சம்பந்தமில்லாத கதைகள்... கடைசியில் இரண்டு டேவிட்டுகள் சந்தித்துக் கொள்வதைத் தவிர வேறு எந்த சினிமாத்தனமும் இல்லாமல் நகர்வது நல்ல விஷயம்!

கோவா ...... ஜாலி ஆவியாக வலம்வரும் விக்ரம் அப்பா கேரக்டர்..... விக்ரம் எடுக்கும் "கிறுக்கு சாண்டா!!" காமிக் கேரக்டர்...... மற்றும் புதுமையான கோவா வாழ்க்கை போன்றவை விக்ரம் ஸ்பேஸை ஜாலியாகக் கொண்டுபோனாலும் ஒருபக்கம் ஜீவா சீரியஸ்ஸாகப் பாதிகிணறு தாண்டிவிட்ட போதும் தேமேயெனத் தண்ணியடித்துக் கொண்டிருக்கும் சீயான் படத்தில் சோலோ டிராக் காமெடி செய்கிறாரோ என்றுதான் தோன்றும்!

ஜீவா பகுதியில் லாரா தத்தா இயல்பாக வந்தாலும் அரைகுறையாகப் போய்விடுவார்..... அதுவும் யதார்த்தம்தான்!

யதார்த்தமும், பரிசோதனையின் புதுமையும் தவிர "டேவிட்" ஒரு விபரீத  முயற்சிதான்.... அதிலும் குறிப்பாகத் தமிழில்!

ஏற்கெனவே தொடர் தோல்விகள் தந்துகொண்டிருக்கும் ஜீவாவை இன்னும் நாலுபடி கீழே தள்ளிவிடும் கான்செப்ட் இது! ஆனால் உடல்மொழியும், டயலாக் டெலிவரியிலும் ஜீவா பின்னியெடுக்கிறார்! நடிப்பு சூப்பர்பா வருது ஜீவாவுக்கு......... விக்ரம், தபு, மற்றும் எல்லாருமே நடிப்பில் படு கேஷுவலாகக் கலக்கியிருப்பார்கள்! நடிகர்கள் எந்தக் குறையும் வைக்கல..........

படத்தில் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல விஷயம் இசை! அனிருத்தோட சேர்த்து மொத்தம் ஆறேழு பேர் போடுறாங்க டைட்டிலில்.... பாட்டும் சரி..... இசையும் சரி இனிமை புதுமை!

ரத்னவேலு மற்றும் வினோத்தின் ஒளிப்பதிவு இரண்டு கதைகளையுமே யதார்த்தமான நிறங்களில் கண்களுக்குக் குளுமையாகப் பரிமாறியிருக்கிறார்கள்......

ஆனால்...........எல்லாம் இருந்தும் எதுவுமேயில்லை என்கிற மாதிரிதான் இருக்கும் படம் முடிந்தபின்பு!

புதுமையென்று சொன்னால் "12-பி" கூடத்தான் புதுமையான முயற்சி... ஆனால் விளைவு என்ன ஆனது? அதேதான் இங்கும்!!

வலியைத் தாங்கும் "டேவிட்"..... ஒரு பெயர்...... இரண்டு வாழ்க்கை

அழுத்தமே இல்லாத "டேவிட்" ஒரு படம்..... இரண்டு கதைகள்........!! :

மொத்தத்தில் .......

ஆடியன்ஸுக்கு "டேவிட்" -  ஒரு டிக்கெட்....... இரண்டு நூறு ருபாய் நோட்டு....... ஊஊஊஊஊஊ... கோவிந்தா கோவிந்தா!!!! :-))))

சீக்கிரம் விஜய் டிவில போட்டுடுவாங்க..............பாருங்க!!

அன்புடன்,
பிரபு எம்


Tuesday, February 05, 2013

விஸ்வரூபம் [U/A ] (2013)





"தக தக தக.....

தின தின தின....

னாகனாக தகிடதகிட......" வென கச்சிதமான "கதக்" வெட்டுக்களுடன் அபிநயக் கமல் திரையில் தோன்ற ஆர்ப்பரிப்பது இந்தமுறை கமல் ரசிகர்கள் மட்டுமல்ல...... அவரைப் படுத்தியெடுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் புண்ணியத்தில ஆதரவுமொழியில் அரங்கமே கைதட்டி வரவேற்கிறது கமலை....... மரியாதையுடன்!! :-))

தகிட தகிடவெனக் குறும்பாகக் குழையும் விஸ்வநாத‌  எபிஸோட் சட்டென முடியும்வேகத்தில் படம் தடதடக்க ஆரம்பித்து நிற்காமல் தொடரும் ஜாலத்தில் தாமதமாகத்தான் நினைவுக்கு வருகிறது "தடை பண்ண இந்தப் படத்தில் என்ன இருக்கிறது என்று?!"

தடைகளை மட்டுமல்ல...... தமிழ் சினிமா இயங்கிவரும் தளங்களையும் உடைத்து விஸ்ஸ்ஸ்ஸ் எனக் கிளம்பியிருக்கும் "விஸ்வரூபத்"தின் முதல் அத்தியாயம் இது!!!!

பொதுவாகவே பயங்கரவாதத்தைத் (Terrorism) தீவிரவாதம் (Extremism) என்று அழைக்கும் தவறான வார்த்தைப்பிரயோகம் தமிழில் சகஜம்!

பூமியில் பயங்கரங்களை விதைப்பவர்களின் பெயர் பயங்கரவாதிகளே! அந்த பயங்கரவாதம் ஓரளவு நியாயப்படுவதுபோல் தெரியும் (இன்றைய மீடியா/சோஷியல் நெட்வொர்க்கிங் நியதிகளின்படி!) "தீவிரவாதிகள்"அல்லது இன்னும் சிறப்பாகப் "போராளிகள்"என்று அழைக்கப்படும்போது!!! இந்த பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதங்களை உள்ளும் புறமுமாக அணுகுவது விஸ்வரூபத்தின் புதுமை என்றால் அதற்கு இத்தனை வேகமான திரைக்கதையும் விவேகமான காட்சியமைப்பும் சாத்தியமா(க்)கியிருப்பது நிச்சியமாக அத்தனை சாதாரணமான காரியமில்லை!

நியூயார்க் நகரில் ஒரு நியூக்ளியர் குண்டுவெடிப்பை நிகழ்த்த தாலிபான்களின் தலைவர் ஓமர் (ராகுல் போஸ்) ஒரு மெகா மகா திட்டம் தீட்டுகிறார்...... "திட்டம்" என்றால் ஒரு டெரர் ப்ளான் என்று கடைசி சீனில் துப்பறியும் அதிகாரி சிரித்துக்கொண்டே விளக்கிச் சொல்வதுபோல் இல்லாமல்..... நுணுக்கமாக, மிக மிக நுட்பமாக...... பயங்கரவாத சம்பவங்களில் இதுவரை வெளிவந்திருக்கும் ஒவ்வொரு ஃபுட்டேஜும் எப்படித் தயாராகியிருக்கும் என்கிற ரீதியிலெல்லாம் செல்லும் அசுரத்தனமான கற்பனை...... அமெரிக்க மற்றும் உலக நாடுகளின் கோணத்தில் திரைக்கதையின் பார்வை வைக்கப்படும்போது தாலிபான்களின் அனைத்து செயல்பாடுகளும் உணர்வுகளும் மொத்தமாகவே "பயங்கரவாதம்" என்று நமது மனங்களால்  லேபிள் குத்தப்படும்! அதே திரைக்கதை அடுத்த தளத்தில் அந்த ஆஃப்கன் மண்ணிலேயே கால்பதித்து ரத்தமும் யுத்தமுமாய் கோணத்தை மாற்றும்போது...... "பயங்கரவாதம்" என்னும் வார்த்தைக்குள் ஒளிந்திருக்கும் ஜிஹாதியில் தொடங்கி..... பாசம், தியாகம், புனிதம் என்றெல்லாம் நவரசமும் வெளிவந்து பதைபதைக்க வைத்திருப்பதுதான்  திரைக்கதையின் விஸ்வரூபம்!
இப்படித் தீவிரவாதத்தை "உள்ளும் புறமுமாக" அணுகியிருப்பது எப்படி சாத்தியமானது என்று கமல் ஒருநாள் விளக்கிச்சொல்ல வேண்டும்...... என்னைப் பொறுத்தவரை தீவிர/பயங்கரவாதங்களை உலகம் அணுகவேண்டிய மாற்றுக் கோணத்தில் உலக நாயகன் அணுகியிருக்கிறார்! (செகண்ட் பார்ட்டில் என்ன சொல்லப்போகிறார் என்று ஆர்வம் பெருகுகிறது!)

ஆஃப்கானிஸ்தானின் யுத்தக்கள மண்ணைப் பரிசோதித்து அம்மனிதர்களின் ரத்த ரசாயணங்களை அளந்துபார்த்தபின் தன் கதைக்கான விதைகளைத் தூவியிருப்பது அறுவடையில் யதார்த்தமாய் அழகாக மட்டுமின்றி அழுத்தமாகவும் வந்திருக்கிறது!

ஒரு பட்டனில் உடல்சிதறி உயிர்விடப்போகும் சிறுவனின் முந்தைய இரவின் இருநிமிட கடைசி ஆசையாக ஊஞ்சலில் கண்மூடிக் காற்று வெளியில் அவன் மிதக்கும் ஏகாந்தம் அடுத்தகாட்சியில் அவன் உயிர்விடும்போது அந்த "மனித வெடிகுண்டின்" உயிரிழப்புக்கூட உஷ்ண‌ப்படுத்துகிறது! ரேடியோ ஆக்டிவ் சீசியத்தை வெறும் விரல்களால் சுரண்டி கேன்ஸரை அன்புடன் வரவழைத்து ஸ்லோ டெத்துக்குத் தங்களை ஆட்படுத்திக்கொண்டவர்களை பயங்கரவாதிகள் என்பதா இல்லை தீவிரவாதிகள் என்பதா இல்லை என்னவென்று அழைப்பது?!! கால்படாத இடங்களில் நம்கண்பட வைப்பதைத்தான் கடல்தாண்டிய தமிழ்சினிமா செய்திருக்கும் சாதனை....... விஸ்வரூபம் கண்படா இடங்களை மனதில் விழவைத்திருப்பது அபூர்வம்!

வெல்....இந்தப் படத்தை ரசிக்கக் கொஞ்சம் பொதுவிஷய தரிசனமும் உலகத்திரை பரிச்சியமும் இருப்பது நலம்..... ஜஸ்ட் பார்த்துவிட்டு உவ்வே.... மொக்கபடம்னு யார் சொன்னாலும் " நோ கமெண்ட்ஸ்"தான்....... எப்படி தடை செய்யப் படத்தில் என்ன இருக்கின்றது என யோசித்தபோது புரியவில்லையோ அதேபோலத்தான் படத்தை மொக்கை, சப்பையென்று தூற்றுவதற்கும் எதுவுமில்லை........ விஸ்வரூபம் தருவது ஒரு திரைஅனுபவத்தை......! அனுபவத்தில் நல்ல அனுபவம்..... மொக்கை அனுபவம் என்று பகுத்துப்பார்ப்பதற்கெல்லாம் ஏழறிவு வேண்டும்....அதனால‌... வெரி சாரி..... எனக்கு ஆறுதான் இருக்கு!  ;-)

கமல் நடிப்பு.......... "பாட்ஷா"வில் மாணிக்கம் திடீரென்று பாட்ஷாவாகும் சீனைப்போன்று இதிலும் ஒரு பவர்ஃபுல் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் சீன் உண்டு...... அதில் கமல் மாற்றிக்காட்டும் இரண்டு பாத்திரங்களுக்கும் இடையேயான டிஃப்ளெக்ஷன் கோணத்தை அளப்பதற்கு நடிப்புலகில் ஏதேனும் மெட்ரிக் அளவு இருந்தால் எல்லா மொழிகளிலும் திரைநடிப்புப் பள்ளிகளில் பாடமாக்கிவைக்கலாம்! இத்தனை ஆழமான கதையமைப்பிலும், காட்சியமைப்பிலும் கமல் தன் நடிப்பையும் இயக்க ஸ்பேஸ் எடுத்துக்கொண்டதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்! காரணம் "விருமாண்டி"யில் அந்த விஷயத்தில் எனது ஏமாற்றத்தைப் பதிவுசெய்திருந்தேன்! கமல் அபாரம்!

பூஜாகுமார்... பாத்திரம்..... என்னைப்பொறுத்தவரை பளிச் சென்று திரைக்கதையில் தெரியும் ஒரு லெட்-டவுன்...
கமல் படத்து 'பொம்மனாட்டிகள்' எல்லாரும் எப்போதும் இப்படித்தான் இருப்பார்கள் என்று எல்லாருக்கும் தெரிகின்ற அளவுக்கு அதே பேட்டர்ன்..! இதில் அவர் ந்யூக்ளியர் ஆன்காலஜியில் பி.ஹெச்.டி முடித்தவர்வேறு... சூழ்நிலை கைமீறிப்போய்..... டெரரிஸம்..... கொலை....அம்மாஞ்சிக் கணவனின் "விஸ்வரூபம்"என சர்வகொடூரத்தையும் சாதாரணமாகக் கண்முன்னே பார்த்தபின்னும்கூட அவ்ளோ அறிவாளிப்பொண்ணு "தசாவதாரம்" அசின் மாதிரி மொன்னத்தனமாக கேள்விகேட்பதும் கதறுவதுமாக இருப்பது இத்தனை அசாத்தியமான முயற்சியில் அசட்டுத்தனமாகத் தெரிந்தது....
ஆனால் க்ளைமேக்ஸின் மைக்ரோவேவ் கான்செப்ட்.....வாவ்!!

ஆண்ட்ரியா, சேகர் கபூர்..... திரைக்கதை போகும்போக்கில் பொருந்திக்கொண்டு கோ-ஆப்பரேட் செய்திருக்கிறார்கள்.......

ராகுல் போஸின் "விஸ்வரூபத்தை"ப் பார்க்கவாய்ப்பில்லை...... ஆனால் ஒரு சூடான சந்தர்ப்பத்தில் விரல்களால் துப்பாக்கி சுடும் காட்சியில் "இவன் யாரென்று தெரிகின்றதா?!" என்று பாட்டு கேட்கும் அவர் யாரென்று தெரிந்தவர்களுக்கு!

"அல்லா ஏன் இப்படிச் செய்யறாரு ?" என்று ஃபுல்டைம் டெரரிஸ்ட் (ராகுல்தான்!) ஆற்றாமையில் அழுவதாக ஒரு காட்சி வரும்..... ரொம்ப ரொம்ப சென்ஸிடிவ்வான காட்சியது...... திரையில் பாருங்கள்!

நாசர்..... அடப்போங்க சார்..... நீங்க எல்லா பாலும் சிக்ஸர் அடிப்பீங்கன்னு நான் வேற சொல்லணுமா!!

சானு வர்கீஸின் ஒளிப்பதிவில்..... தாலிபான் தீவிரவாதிகளே தமிழ்ல பேசினாலும்கூட தமிழ்ப்படம்னு நம்பமுடியல அத்தனை சாகசாமான சர்வதேசத்தரம்! இந்தப் படத்துக்கு இவ்ளோ வேணும்தான்.... கொஞ்சம்கூட காம்ப்ரமைஸ் செய்துகொள்ள முடியாத பொறுப்பை ஏற்றுத் தானும் இம்மியளவு காம்பரமைஸ் செய்துகொள்ளாமல் மிரட்டியிருக்கிறார் மனிதர்......

படம் போன வேகத்தில் மகேஷ் நாராயணனின் எடிட்டிங்கை நிதானித்து கவனிக்கமுடியவில்லை.... இதுக்குமேல என்ன சொல்லணும்!

ஷங்கர்-லாய்-எகாஸனின் இசை மிரட்டுகிறது பின்னணியில்!

தொழில்நுட்பம் அபாரம்.... எனக்கு ஆரோ 3டியில் காணும் வாய்ப்பு கிட்டவில்லை..... எனினும் டால்பி-க்யூபிலேயே மிரட்டிய சவுண்ட் எஞ்சினியரிங் ஆரோ 3டியில் அதிரடித்திருக்கும் என்று நம்புகிறேன்!
ரொம்பவே ஹை-ஃபை தொழில்நுட்பத்தில் கலக்கியிருக்கிறார்கள்.......

"வில்லன்" என்று யாரும் இல்லாததும் "வில்லத்தனம்" என்பது நாயகன் உட்பட எல்லாரிடமும் இருப்பதும் நான் ரசித்த மிகமுக்கியமான பொதுப்பொருள் "விஸ்வரூபத்தில்"!

இது வேறுமாதிரியான முயற்சி....... பொத்தாம்பொதுவான பொதுப்பொருளாகிவிட்ட சர்வதேச தீவிரவாதத்தின் கருப்பொருள் சிதையாது வந்திருக்கும் மிகவும் ப்ரோடோடைப் இந்தியப் பதிவிது உலகசினிமாவில்!

இன்னும் ஹோம்-க்ரவுண்டிலேயே படம் ரிலீஸாகத காரணத்தால் கதையையும், சிலாகித்த பல காட்சிகளையும் குறிப்பிடாமல் தவிர்த்திருக்கிறேன்..... படம் பார்த்தவர்களுக்கு ஸாரி!

விஸ்வரூபம் - விஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......வ்ர்ர்ர்ர்ரரூரூம்ம்ம்ம்!!!!

நல்ல வித்தியாசமான விஸ்தீரணமான திரை அனுபவத்திற்காக விஸ்வரூபம் பாருங்க!

அன்புடன்,
பிரபு எம்

Wednesday, January 09, 2013

"விஸ்வரூபம்" - வடபோச்சே!!!


நாங்க "விஸ்வரூபம்"  டி.வில பாக்க‌ புக் பண்ணிட்டோம்ல!! ஹா ஹாஹா.....



என்னது??? டிவி லயே ரிலீஸா!! அப்டீனா படம் புஸ்ஸ்ஸாகிட்டா தியேட்டர்காரங்களுக்குப் பணம் திருப்பித்தர வேணாமா?!!


டிடிஎச்-ல ரிலீஸ்னு புக் பண்ணவங்களுக்குக் கூடப் பணம் திருப்பித் தரத் தேவையில்ல ரஜினி..!!!


என்னாது???? "விஸ்வரூபம்" டிடிஎச் ரிலீஸ் ப்ளானை மாத்திட்டாகளா?!!!! ஐயோ ஐயோ வடபோச்சே... ராஸ்கோலு.. ராஸ்கோலு!!!

ஹஹ.....கண்ணா..... நான் எஸ்கேப்பு பா!! புக் பண்ணப்போறேன் பண்ணப்போறேன்னு சொல்லிட்டேதான் இருந்தேன் ஆனா... நான்.... பண்ணல்ல!!!!

நான் அப்பவே சொன்னேன்...........!!!


குழப்பங்கள் கூடிக் கும்மியடித்ததுபோல வந்திருக்கின்றது கமலின் விளக்கம்.....

தியேட்டரில்தான் படம் முதலில் ரிலீஸாகிறதாம்..... இருந்தாலும் கமல் மனம்தளராமல் கூறுகிறார் டிடிஎச் சிலும் ரிலீஸாகும் என்று! எது எப்படியோ இவை அனைத்தையும் ஜனங்களிடம் பணம் வசூலிக்கும் முன்பே முடிவுக்குக் கொண்டுவந்திருக்க வேண்டும்.... தற்சமயம் பணத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளும் வசதியும் டிடிஎச் நேயர்களுக்கு இல்லை.....!

தியேட்டர்களுக்கு  முன்பாக டிடிஎச்-சில் ரிலீஸ் என்றுசொல்லி விற்ற விலையில் படம் வந்து நான்கு நாட்களுக்குப் பிறகு படத்தை ஆறிய சோறாகப் பரிமாறுவது நியாயமாகாது....!

அன்புடன்,
பிரபு எம்