Thursday, February 07, 2013

டேவிட் [U/A] (2013)






ஒரு பெயர்.... இரண்டு வாழ்க்கை.......

அதாவது இரண்டு டேவிட்!!

இதே படம் ஹிந்தியில்..... ஒரு பெயர்.... மூன்று வாழ்க்கை......

அதாவது மூன்று டேவிட்!!!

நான் ஸ்கூல்ல படிக்கும்போது எங்க க்ளாஸ்ல மொத்தம் நாலு பிரபு இருந்தோம்.....

அதாவது..... ஒரு பெயர்....... நான்கு வாழ்க்கை.....!!!! (அதுல ஒருத்தன் பேரு டேவிட் பிரபு!! ஹிஹிஹிஹி)

என்னதாண்டா சொல்ல வர்றன்னு எரிச்சலா கேக்குறீங்களா.......! அதான் அதான் அதேதான்.....! அதையேதான் எனக்கும் கேட்கணும் பிஜாய் நம்பியார்கிட்ட!!!! :-))))

"பாஸ்.... என்னதான் சொல்ல வர்றீங்க????????????????!!!!!!!!!!!!!!!"

ஜீவா பேரும் டேவிட்........  விக்ரம் பேரும் டேவிட்! ஜீவாவோட எபிஸோட் 1999ல மும்பைல நடக்குது......
விக்ரமோட எபிஸோட் 2010ல் கோவாவில் நடக்குது.......

ரெண்டும் சேர்த்து 2013 என்னாத்துக்கு தமிழ்நாட்டுல‌ வந்து எழவு கொட்டுதுன்னுதான் புரியல....!!!

வெல்.....

1999-ல் மும்பையில் ஒரு கட்சிப் பொதுக்கூட்டத்தில் ரோஹிணி ஹட்டங்காடி பெருங்கூட்டத்துக்கு முன்பாக மைக்கில் பேசிக்கொண்டிருக்கும்போது கூட்டத்திலிருந்து ஜீவா முன்வரிசையை நோக்கி வருகிறார்....... கையில் கத்தியுடன்!!! நமக்கு ஒண்ணுமே புரியமாட்டேங்குது....... ஏன்...........?? ஏன்னா அதான் ஃபர்ஸ்ட் சீன்!

2010-ல் கோவாவில் ஒரு கல்யாணம் நடக்குது.... விக்ரம் மாப்பிள்ளைத் தோழனா நிக்குறாரு...... மணக்கோலத்துல இருக்குற பொண்ணுகிட்ட ஏதோ வில்லங்கமா பேசப் பாக்குறாரு..... அதுவும் நமக்கு எதுவுமே புரியாது..... ஏன்னா அதுவும் விக்ரம் எபிஸோட்ல முதல் சீன்!

அப்புறம் ஒரே பேருடைய இந்த ரெண்டு வாழ்க்கையிலும் ரெண்டு ஃப்ளாஷ்பேக் ரெண்டு மணி நேரம் ஓடும்........

அதுக்கப்புறமா................

1999-ல் மும்பையில் ஒரு கட்சிப் பொதுக்கூட்டத்..... ரேஹிணி ஹட்ட...... பெருங்கூட்டத்....... மைக்கி..... பேசிக்.......போது  ஜீவா முன்வரிசையை நோக்கி வருகிறார் கையில் கத்தியுடன்!!!

2010-ல் கோவாவில் ஒரு..... கல்யா........விக்ரம்..... மாப்பி.......த்தோழ...... நிக்குறா.... மணக்கோ.... இருக்குற பொண்ணுகிட்ட ஏதோ வில்லங்கமா பேசப் பாக்குறாரு......!!!"

அதாவது...... அதே சீன் ரெண்டு மணி நேரம் கழிச்சு வருது.......ங்கொய்ய்யால..........அப்பவும் நமக்கு ஒரு எழவும் புரியலைன்னா என்னதாங்க பண்ணுறது!!!! :-)))

சரி.... அப்புறம் என்ன நடக்குதுன்னு கேக்குறீங்களா?! ஜீவா ரோஹிணி ஹட்டங்காடியைக் கொல்லுறமுன்னாடியே அவருக்குத் தெரிந்த இன்னொருத்தன் அவங்கள சுட்டுத்தள்ளிடுவான்...... விக்ரம் லவ் பண்ண அந்தப்பொண்ணை நிச்சியம் பண்ணபடி அவர் நண்பன்தான் கல்யாணம் பண்ணிக்கிறான்!

குழப்பமா இருக்கா.... நீங்க குழம்பக்கூடாது ஏன்னா...... படம் சொல்லுற மெசேஜ்.... "வாழ்க்கைல வலியத் தாங்குறவன்தான் டேவிட்!"

அந்த‌வகையில் பார்த்தா படம் பாக்குற எல்லாருமே "டேவிட்"தான்!!!! :-))
என்கூட தியேட்டர்ல ஒரு 57 "டேவிட்"கள் படம் பாத்தாங்க......
ஸோ..... ஒரு பெயர்..... 57 வாழ்க்கை!!! :-))))

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜோக்ஸ் அபார்ட்.....

வித்தியாசமான முயற்சின்னு சொல்லலாம்! ஹ்ம்ம்ம் சொல்லித்தான் ஆகணும்.....

ஜீவா எபிஸோட்....... சீஸனல் எஃபெக்டாக.....ஒரு கிறிஸ்தவக் குடும்பப் பின்னணியில் மும்பையில் நிகழ்கிறது.....
கல்லா கட்டுவதில் விருப்பமில்லாத நேர்மையான  ஃபாதர் நோயலாக நாசர் (ஆக்சுவலி பாஸ்டர் என்றுதான் அழைக்கவேண்டும்!) ஒரு சாதாரண பொலிடிகல் கேமுக்காக சம்பந்தமே இல்லாமல் ஃபாதர் நோயல் மிகக் கொடூரமானமுறையில் பப்ளிக்காக‌ அவமானப் படுத்தப்படுகிறார்... ஜீவாவால் எதுவுமே செய்யமுடியாமல் போகிறது...... நாசரின் மனநிலை இதனால் பாதிக்கப்படுவதால் ஜீவா ரொம்பவே டிஸ்டர்ப் ஆகிறார்..... நாசர் ஷேவ் செய்யும்போது முகத்தில் ஆர்ப்பாட்டக்கும்பல்தன் முகத்தில் கரிபூசி அவமானப் படுத்திய காட்சியை நினைத்து ரேசரால் முகத்தைக் கிழித்துக்கொள்ளும் காட்சி நிஜமாகவே மிக அழுத்தமானது! நாசர் நடிப்பு அபாரம்!...... ஜீவா நியாயம் கேட்கக் கிளம்புகிறார்.... அடிவாங்குகிறார்... அடிக்கவும் செய்கிறார்...... எல்லாம் எதார்த்தமாக நகர்வது பெரிய ஆறுதல்!
ஜீவா நியாயம்கேட்டுத் தட்டும் ஒவ்வொரு கதவும் ஏற்கெனவே திறக்காத கதவுகள் என்று சின்னவயதில் இருந்து சினிமா பார்ப்பவர்கள் அத்தனைபேருக்குமே தெரியும்! இருந்தாலும் காட்சிகளின் யதார்த்தம் பலமே!
நம்மைக் கொடுமைப்படுத்தாமல் மெல்லியதொரு அனுபவம் கொடுக்கும் காட்சித்தொகுப்பு ஜீவாவின் எபிஸோட்!

ஒருபக்கம் ஜீவாவின் கதை படு க்விக்காக டேக்-ஆஃப் எடுத்து சீரியஸாகக் கிளம்பிவிட...... மறுபுறம் கோவாவில் சீயான் விக்ரம் எந்த லட்சியமும் இல்லாத ஒரு லைட்டான கதையமைப்பில் குடி..குடி...குடி யென்று குடித்துத்தள்ளுகிறார்..... "குடிப்பழக்கம் உடல்நலத்திற்குக் கேடு" என்னும் வார்னிங் வாக்கியம் ஏதோ சேனல் லோகோ போல ஸ்க்ரீனின் ஓர் ஓரத்தில் நிரந்தரமாக இடம்பிடித்துவிடுகின்றது விக்ரம் எபிசோட் முழுக்க!!  திருமணம் முடிவான  மணநாளன்று விக்ரமின் மணப்பெண் தன் பாய்ஃப்ரெண்டுடன் ஓடிப்போய்விட அந்த விரக்தியின் வலியில் உழலும் கேரக்டர் விக்ரமுக்கு! அவரது ஒரே தோழி மசாஜ் பார்லர் வைத்திருக்கும் தபு.... "என் கல்யாணம் நின்னுபோனப்போ  ஊரே என்னப் பாத்து சிரிச்சப்ப நீ மட்டும்தான் எனக்காக அழுத..!!" என்று தபுவைப் பார்த்து போதையில் விக்ரம் எமோஷன் கொட்டும்போது.... "உன் கல்யாணப்பொண்ணு ஓடிப்போகும்போது என் நகைய எல்லாம் தூக்கிட்டுப் போயிட்டா அத நெனச்சுதான் நான் அழுதேன்னு உன்கிட்ட நிறைய தடவ சொல்லிட்டேன் டேவிட்!!!"னு அசால்டாகச் சொல்லுவார் தபு......... :-)) இப்படித்தான் முழுக்கதையும் நகரும்! நடுவே நண்பனுக்கு நிச்சியக்கப்பட்ட ஓர் அழகான அர்ச்சனாவ ("மொழி" ஜோதிகா பேரு!! புரிஞ்சிக்கோங்க!) விக்ரம் லவ் பண்ண ஆரம்பிப்பார்..... அவளும் தன்னை விரும்புறா என்று சைகை மொழிக் குழப்பத்திலும், 24/7 போதையிலும் விக்ரம் தானும் நம்பி தபுவையும் நம்ப வைப்பது சுவாரஸ்யம்...... கடைசியில் விக்ரமின் நண்பனுக்குத்தான் கிடைப்பாள் அந்த மௌன தேவதை!!!

இரண்டு கொஞ்சம்கூட சம்பந்தமில்லாத கதைகள்... கடைசியில் இரண்டு டேவிட்டுகள் சந்தித்துக் கொள்வதைத் தவிர வேறு எந்த சினிமாத்தனமும் இல்லாமல் நகர்வது நல்ல விஷயம்!

கோவா ...... ஜாலி ஆவியாக வலம்வரும் விக்ரம் அப்பா கேரக்டர்..... விக்ரம் எடுக்கும் "கிறுக்கு சாண்டா!!" காமிக் கேரக்டர்...... மற்றும் புதுமையான கோவா வாழ்க்கை போன்றவை விக்ரம் ஸ்பேஸை ஜாலியாகக் கொண்டுபோனாலும் ஒருபக்கம் ஜீவா சீரியஸ்ஸாகப் பாதிகிணறு தாண்டிவிட்ட போதும் தேமேயெனத் தண்ணியடித்துக் கொண்டிருக்கும் சீயான் படத்தில் சோலோ டிராக் காமெடி செய்கிறாரோ என்றுதான் தோன்றும்!

ஜீவா பகுதியில் லாரா தத்தா இயல்பாக வந்தாலும் அரைகுறையாகப் போய்விடுவார்..... அதுவும் யதார்த்தம்தான்!

யதார்த்தமும், பரிசோதனையின் புதுமையும் தவிர "டேவிட்" ஒரு விபரீத  முயற்சிதான்.... அதிலும் குறிப்பாகத் தமிழில்!

ஏற்கெனவே தொடர் தோல்விகள் தந்துகொண்டிருக்கும் ஜீவாவை இன்னும் நாலுபடி கீழே தள்ளிவிடும் கான்செப்ட் இது! ஆனால் உடல்மொழியும், டயலாக் டெலிவரியிலும் ஜீவா பின்னியெடுக்கிறார்! நடிப்பு சூப்பர்பா வருது ஜீவாவுக்கு......... விக்ரம், தபு, மற்றும் எல்லாருமே நடிப்பில் படு கேஷுவலாகக் கலக்கியிருப்பார்கள்! நடிகர்கள் எந்தக் குறையும் வைக்கல..........

படத்தில் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல விஷயம் இசை! அனிருத்தோட சேர்த்து மொத்தம் ஆறேழு பேர் போடுறாங்க டைட்டிலில்.... பாட்டும் சரி..... இசையும் சரி இனிமை புதுமை!

ரத்னவேலு மற்றும் வினோத்தின் ஒளிப்பதிவு இரண்டு கதைகளையுமே யதார்த்தமான நிறங்களில் கண்களுக்குக் குளுமையாகப் பரிமாறியிருக்கிறார்கள்......

ஆனால்...........எல்லாம் இருந்தும் எதுவுமேயில்லை என்கிற மாதிரிதான் இருக்கும் படம் முடிந்தபின்பு!

புதுமையென்று சொன்னால் "12-பி" கூடத்தான் புதுமையான முயற்சி... ஆனால் விளைவு என்ன ஆனது? அதேதான் இங்கும்!!

வலியைத் தாங்கும் "டேவிட்"..... ஒரு பெயர்...... இரண்டு வாழ்க்கை

அழுத்தமே இல்லாத "டேவிட்" ஒரு படம்..... இரண்டு கதைகள்........!! :

மொத்தத்தில் .......

ஆடியன்ஸுக்கு "டேவிட்" -  ஒரு டிக்கெட்....... இரண்டு நூறு ருபாய் நோட்டு....... ஊஊஊஊஊஊ... கோவிந்தா கோவிந்தா!!!! :-))))

சீக்கிரம் விஜய் டிவில போட்டுடுவாங்க..............பாருங்க!!

அன்புடன்,
பிரபு எம்


4 comments:

  1. :) முன் பாதி வாசித்தாயிற்று. கட்டாயம் படம் பார்க்க வேண்டும். பார்த்துவிட்டு வந்து மீதிப் பாதி படிக்கிறேன். :)

    ReplyDelete
    Replies
    1. சந்தோஷமா பாத்துட்டு வாங்க........ :)
      நியூசிலாந்துல இந்தப் படம் வந்திருக்கா என்ன?!

      Delete
  2. "சீக்கிரம் விஜய் டிவில போட்டுடுவாங்க..............பாருங்க!!"

    நிச்சயம் பார்க்கலாம். விமர்சனத்திற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. சும்மா காமெடிக்கு சொன்னேன் நண்பா.... தியேட்டர்லகூட பார்க்கலாம் நீங்க.....
      கருத்துரைக்கு நன்றி நண்பா.... :)

      Delete

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)