(இது நடந்தது ஆகஸ்ட் மாதத்தில்... இப்போதுதான் பதிவிட நேரம் கிடைத்தது)
பஸ்ஸ்டாண்டிலும் ஏர்போர்ட்டிலும் கொஞ்சம் நின்று கவனித்தால் எத்தனையெத்தனை புதிய முகங்கள்!!!
ஐம்புலணில் நான்கினை வகைபார்த்து இடம்பொருத்தி ரசித்துத்தான் படைத்திருக்கிறான் மனித முகத்தை, ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதமாக...!! அன்றைக்கும் மதுரை ஏர்போர்ட்டில் நல்ல கூட்டம்... புதுப்புது முகங்கள்... விழிகளின் ஸ்கேனிங்கில் சிந்தையில் அப்லோட் ஆகிக்கொண்டிருந்த இருநூற்றி சொச்சப் புதிய முகங்களில்.... ஒரே ஒரு முகம்.... இருபத்துசொச்ச வருடங்கள் அதே மதுரையில் வாழ்ந்திருந்த எனக்குப் பரிச்சியமானதாய் இருந்தது!!
டக் கென்று அந்த முகத்தில் குத்தி நின்றன விழிகள்...என் டேட்டாபேஸில் ஆழமாகப் பதிந்திருக்கும் அதே கண்கள்...அதே முகம்... அதே கழுத்து... அதே தாடி... என்று மேட்சிங் செய்துபார்த்து கன்ஃபார்ம் செய்ய ஆன நேரம் ஒன்றரை நொடியென்று கொள்ளலாம்!! ஆம் இவரும் ஒரு மதுரைப் பழக்கம்தான்.... மதுரையின் "சுப்ரமணியபுரத்"துப் பரிச்சியம்!!!
இயக்குனர்/ நடிகர் / தயாரிப்பாளர் திரு. சசிக்குமாரை சந்தித்தேன்.... !!
மதுரை டூ சென்னை ஜெட் ஏர்வேஸில் எகனாமி க்ளாஸில் துணைக்கு யாருமின்றி முற்றிலும் தனியாக வந்திருந்தார்! யோசித்துப் பார்த்தால் தமிழில் "பசங்க" மாதிரி நல்ல படங்களைத் தயாரிப்பதைவிட மதுரைக்கு ஃப்ளைட்டில் தனியாக வருவது ரிஸ்க் இல்லைதான் எனினும் (!) தில்லு வேணும்!! "தன்"னை நன்கு தெரிந்த, எனினும் தனக்கு யாரென்று தெரியாத கூட்டத்தில் அமைதியாக ஒதுங்கி அமர்ந்திருந்தார்.... இங்கு யாரும் தன்னை அடையாளம் கண்டுகொண்டிட வேண்டாமே! என்கிற ரீதியில் அவரின் உடல்மொழி இருந்தது!! நிழலை அலங்கரித்து, படம்பிடித்து, நம்மோடு உறவாடப், பிரதியெடுத்து விநியோகித்துவிட்டு இப்படிக் கொஞ்சமும் பரிச்சியமற்ற "நிஜத்"தை மறைக்க மெனக்கிடலைத் தூர நின்று கவனித்த நான்... ஹ்ம்ம் "பிரபலங்கள்" என்று நினைத்துக்கொண்டேன்!!
மிகவும் இயல்பான மனிதர்... சாதாரணமாகப் பேசினார்... மூன்றுமுறை தான் அமர்ந்திருந்த இருக்கையை மாற்றியவர் மூன்றாம் முறை என் இருக்கைக்கு சற்று அருகில் வந்து மாட்டிக்கொள்ள எழுந்து சென்று கை கொடுத்துப் பக்கத்தில் அமர்ந்துகொண்டேன்!! அவரது ப்ரைவசியைப் பற்றியதோர் அக்கறை மட்டும்தான் அவரிடத்தில் காணமுடிந்ததே தவிர public avoidance என்றெல்லாம் பெயர் கொடுத்துவிடும் விதமாக நிச்சியம் இல்லை....
வழக்கம்போல் என்னுடைய சினிமா ஆசையை விவரித்தேன்! இதுவரையிலான (ஐ.டியில் இருந்துகொண்டே) கோடம்பாக்கத்துக்கு நூல் விட்ட என் சின்னச்சின்ன முயற்சிகளையெல்லாம் சொன்னேன்....வலைப்பதிவைப் பற்றியும் சொன்னேன்..... எங்கே வேலை பார்க்கிறேன்.. எவ்வளவு சம்பளம் போன்று நுணுக்கமாகக் கேள்விகள் கேட்டுக்கொண்டு... "நல்ல வேலையில இருக்கீங்க, நல்ல நிலையிலதான் இருக்கீங்க.... ஒரு மல்ட்டிஃப்ளக்ஸுக்குப் போய் இருநூறு ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி ரிலாக்ஸ்டா படம் பாத்துட்டு உங்க ப்ளாக்குல விமர்சனம் எழுதுற நிம்மதி ப்ரொடியூசரைத் தேடி, லொகேஷன் பார்த்து, வெயில் மழை பார்க்காம ஃபீல்டு வொர்க் பண்ணிப் படம் எடுக்கிறதுல இருக்க்காது.... எனக்கு இதுதான் ஃபீல்டுன்னு கிளம்பி வந்துட்டேன்.. ஃபிக்ஸ் ஆகிடிச்சு.... கண்டினியூ பண்ணுறேன்... உங்க ஃபீல்டை விட்டுட்டு ஏன் இங்க வரணும்னு நினைக்கிறீங்க!!" என்று கேட்டார்!! (இதையேதான் நான் இதற்குமுன்பு கலந்துரையாட வாய்ப்புக் கிடைத்த சிம்புதேவன் அண்ணனும், எஸ் ஜே சூர்யா சாரும் சொன்னார்கள்!!) :-(
நானும் வழக்கம்போல "ஒருநாள் வருவேன்ன்னு நம்புறேன் சார்" என்று சிரித்து மழுப்பிவிட்டு அடுத்த டாபிக்குக்கு சென்றேன்...
"சுப்ரமணியபுரம்" பற்றிக் கேட்டேன்.... நானும் மதுரையில் பிறந்து வளர்ந்தவன்தானே... பரமன், அழகர் போன்ற மனிதர்களைக் கரிமேடு போன்ற பகுதிகளில் சாதாரணமாகப் பார்த்திருக்கிறேன்... ஆற்றிலும் கண்மாயிலும் கொலைசெய்யப்பட்டு அங்கேயே சேற்றில் சொருகிவைக்கப்பட்ட பிணங்களை பாலத்தில் செல்லும்போது பைக்கிற்கு சைட்ஸ்டாண்ட் போட்டு வேடிக்கைப் பார்த்திருக்கிறேன்.... (அதுக்காக மதுரை ஒண்ணும் டெரர் ஊரெல்லாம் இல்லைங்க!!) "ஸோ.. "சுப்ரமணியபுரம்" எப்படி சார்... ஏதாவது உண்மையை அடிப்படையாகக் கொண்ட கதையா?" என்று கேட்டேன்... "இல்லவே இல்லை"ன்னு சொன்னார்...
"உங்களை மாதிரியே, நானும் இதே மதுரையில் வேடிக்கை பார்த்த விஷயங்களையும், பேப்பரில் படித்த விஷயங்களையும் அடிப்படையாகக் கொண்டுக் கற்பனையில் வடித்துப் பார்த்தபோது நல்லா வந்திருக்கே! என்று நம்பிக்கை வந்து எடுத்தப் படம்தான்!!" என்று கேஷுவலாக சொன்னார்...
("சுப்ரமணியபுரம்" படம் பார்த்துவிட்டு எழுதிய என்னுடைய பதிவிற்கு இங்கு சொடுக்கவும்)
"நீங்கதான் பரமன்னு முதல்லயே முடிவு பண்ணிட்டீங்களா?"
"நான் நடிக்கணும்னோ அல்லது நடிப்பேன்னோ நெனெச்சுக் கூடப் பார்த்ததில்லை... ஆக்சுவலி அந்தக் கேரக்டரில் நடித்திருக்க வேண்டியவர் ___________ (ஒரு வாரிசு நடிகர்... அவரின் முதல்படமாக அமைந்திருக்கும் அவர் ஓகே சொல்லியிருந்தால்.... சசிகுமார் அவர்கள் அந்த நடிகரின் பெயரை மறைக்கவில்லை எனினும் நான் இங்கு சொல்வது முறையாகாது!)அவர், நடிக்கிறேன் நடிக்கலைன்னு ரொம்ப தயக்கம் காட்டியதில் பொறுமையிழந்து படத்தை ஆரம்பிக்கணும் என்றுதான் நான் நடிகனானேன்..." என்றார்...
"ஆனா... "நாடோடிகளி"ல் ஃபுல்டைம் ஹீரோவா ஆகிட்டீங்களே....?"
"அது எனக்கு ரிலாக்ஸிங்கா இருந்திச்சு... ஒரு படத்தை உடல்நோக உழச்சு இயக்கிட்டு... ஃப்ரீயா கம்மிட்மெண்ட் இல்லாம நாலு இடத்துக்குப் போய் நல்ல ஒரு கதையில் நடிப்பது ரொம்பவே ரிலாக்ஸிங்...எனக்கும் ரிலாக்ஸ் பண்ணனும் இல்லையா..." என்றார்...
இயக்குனர் சமுத்திரக்கனி பற்றிக் கேட்டபோது... "ஆம் அவர் என் நண்பர்.. என் படத்துல அவர் நடிக்கிறார்.. அடுத்து அவர் இயக்கப் போகிற படத்தில் நான் நடிக்கிறேன்" என்றார்...
விக்ரம் தயாரிக்க சசிகுமார் சார் இயக்கிக் கொண்டிருக்கும் படம் பற்றிக் கேட்டபோது.. "ஆமாம் விக்ரம் சார் படம்தான்.. நாங்க ரெண்டுபேருமே அதில் நடிக்கல... படத்துக்கு இன்னும் பேர் வைக்கல" என்று முடித்துக்கொண்டார்....
அப்படியே.. மெல்ல மெல்ல வளர்ந்துவந்த பேச்சுவாக்கில்... அபிநயா பற்றிக் கேட்டேன்.... அந்த உளியின் ஓசையை உணரவியலாத சிற்பத்தை நடிக்க வைக்கத் தோன்றியது மற்றும் அந்த ஓசையில்லா ஓவியத்தை இயக்கிய அனுபவம் பற்றியும் கேட்டபோது...
"ரொம்ப சிம்பிள்... பாஷை தெரியாத எத்தனையோ பேர் நடிக்கும்போது இதுல ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை" என்றார் கம்பீரமாக... மேலும் "ரொம்ப ஈசி அபிநயா கூட வொர்க் பண்ணுறது... எந்தவிதமான டிஸ்ட்ராக்ஷனும்(Distraction) இல்லாத நடிகை கிடைக்கிறதுதான் கஷ்டம்... !ஷூட்டிங் ஸ்பாட்ல நடிப்பைத் தவிர வேறெதிலுமே அவங்களுக்குக் கவனம் சிதறாது.... ஐ-பாட்ல பாட்டு கேட்டுக்கொண்டே அடுத்த ஸீன்ல எப்படிப் பண்ணலாம்னு டிஸ்கஸ் பண்ணுறவங்களைவிட நம்ம என்ன சொல்லுறோமோ அதைக் கூர்ந்து உள்வாங்கிக் கொண்டு அதைப் பற்றி மாத்திரமே சிந்தித்து ஷுட்டிங்கில் அசத்துகிறவர் அபிநயா.. அவருடன் வொர்க் பண்ணுவது ரொமப ரொம்ப comfortable" என்று அவர் உண்மையாக சொன்னபோது என் மனதில் ஒரு நிறைவு இருந்தது....
அப்புறமும் நிறைய நிறைய பேசினேன் அவரிடம்.... பலபேர் இடையில் வந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்... பொறுமையாக நின்று அத்தனை பேருக்கும் போஸ் கொடுத்தார்.... நானும் ஒரு ஃபோட்டோ எடுத்துக்கொண்டேன்!! மற்றவர்கள் என்னை அவர் உடன் வந்தவன் என்று நினைத்துக் கொண்டதால் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது யாரும் வந்து இடைமறிக்கவில்லை!!
நல்ல அனுபவம்... அவரின் ஈ மெயில் ஐடி வாங்கிகொண்டேன்... "ஃபேஸ்புக்கில் இருக்கீங்களா?" என்று கேட்டேன்... "Log in பண்ணிப் பார்ப்பேன் அவ்ளோதான்" என்றார் மேலும் நம்முடைய வலைப்பதிவை ஒரு பெரிய மீடியமாக கருதும் இயக்குனர்களில் ஒருவராகத்தான் இருக்கிறார்...நம்ம பதிவுலகப் பிரபலங்களைத் தெரிந்துவைத்திருப்பார் என்று நினைக்கிறேன்!! வலையுலகின் விமர்சனங்களைப் பற்றி அறிந்திருக்கிறார்...
ஒரு மிக மிக நல்ல அனுபவமாக உள்வாங்கிக்கொண்டு மும்பை நோக்கி அடுத்த ஃப்ளைட் பிடித்தேன் அடுத்த நாள் ஆஃபிஸ் போவதற்கு!!
பி.கு:
இந்த சந்திப்பை என் வலைப்பூவில் எழுதுவேன் என்று சசிகுமார் அவர்களிடம் அனுமதி வாங்கவில்லை...
அவர் ஏற்கெனவே சில பேட்டிகளிலும் சந்திப்புகளிலும் இந்த விஷயங்களையெல்லாம் பகிர்ந்திருக்கிறார்...
அந்தரீதியில் எந்தவிதமான சங்கடமும் இருக்காது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டுதான் இதை இங்குப் பதிவிடுகிறேன்.... எதற்கு இவ்ளோ மெனக்கிடலான் பின்குறிப்பு என்றால்.... யெஸ், ப்ளாக் ஒரு பெரிய மீடியம்... ;-)
அன்புடன்,
பிரபு எம்

//அதுக்காக மதுரை ஒண்ணும் டெரர் ஊரெல்லாம் இல்லைங்க!!//
ReplyDelete:)
நைஸ்..
ReplyDeleteநன்றி வார்த்தை :)
ReplyDeleteநன்றி கேபிள் அண்ணா :)
நடைமுறை வாழ்வின் எதார்த்தங்களை படமாக்கும் ஒரு நல்ல இயக்குநர் சசி.
ReplyDeleteஅவரோடு நேர்ந்த இந்த சந்திப்பு கண்டிப்பாக உங்களுக்கு மறக்கமுடியா அனுபவமா இருக்கும்னு நம்புகிறேன்.
உண்மைதான் நண்பா... அருமையான அனுபவமாக இருந்தது...
ReplyDeleteநிஜத்திலும் மிகமிக யதார்த்தமான மனிதராகத்தான் இருக்கிறார்...
ரொம்ப நன்றி நண்பா :)